கிழக்கு பசுபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 193-ஆக உயர்ந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பீடம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு பசிபிக் பிராந்தியத்தில் “அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதையில்” பயணித்த ஒரு படகை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தால் வெளியிடப்பட்ட கானொலியில் கடலில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு படகின் மீது ஏவுகணை பாய்வதும், அடுத்த சில நொடிகளில் அந்தப் படகு தீப்பிழம்புகளால் சூழப்படுவதும் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு அமெரிக்கக் கடலோரப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘தி இன்டர்செப்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் 58 தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இதில் மொத்த உயிரிழப்புகள்: 193 பேராக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் உயிர் தப்பியவர்கள்: 4 பேர் மட்டுமே எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்ற ஒரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு வார காலத்திற்குள் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் “சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளநிலையில்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்ற விசாரணை அல்லது தற்காப்புக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் நடுக்கடலில் வைத்து ஏவுகணைகளால் கொல்வது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சுட்டிகாட்டியுள்ளது.
பென்டகன் இதனை “போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போர் என நியாயப்படுத்தினாலும், கடத்தல்காரர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்துப் போதுமான ஆதாரங்களை வழங்கப்படாமை சந்தேகதடதிற்கு இடமளித்துள்ளது.
அம்னெஸ்டி மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்: அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என வலியுறுத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் அமேரிக்காவிளன் நியாயப்படுத்தலை நோக்கும்போது
இந்தப் பகுதிகளைப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மையமாகக் கருதுப்படுவதால். அமெரிக்காவிற்குள் நுழையும் போதைப்பொருட்களைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்பவர்கள் அனைவரும் சிறிய அளவிலான கடத்தல்காரர்களா அல்லது பெரும் கடத்தல் குழுக்களின் தலைவர்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.