சர்வதேச தொழிலாளர் தினம்; கறுப்பு நாளாக முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள், சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01.05.2026), கறுப்பு ஆடை அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் முத்துநகர் சந்தி அருகே இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாகத் தமது வயல் காணிகளுக்கான தீர்வினைக் கோரிவரும் இவ்விவசாயிகள், இம்முறை மே தினத்தைக் கறுப்பு நாளாகக் கருதி வீதியில் இறங்கினர். விவசாய காணிகளைச் சூறையாடி, தனியார் நிறுவனங்களுக்குச் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கியதைக் கண்டித்து இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“எமது நிலம் எமக்கு வேண்டும்”, “விவசாயிகளுக்கு நீதி வேண்டும்”, “நலிவடைந்த உழவர்களுக்கு IMF நீதியைப் பெற்றுத் தா”, “முத்துநகர் விவசாய காணிகளை மீண்டும் ஒப்படை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் குமுறல்:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினர்:

“அன்பான உறவுகளே, இன்று மே முதலாம் திகதி – உலகத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த செந்நாள்! ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசானது முத்துநகர் விவசாயிகளின் நிலங்களையும் உரிமைகளையும் பறித்து, இந்நாளை எமக்குக் கறுப்பு நாளாக மாற்றியுள்ளது.

இலங்கையின் ஆளுகை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து மதிப்பீடு செய்த சர்வதேச நாணய நிதியம் (IMF), முறையான ஆளுகை இல்லாவிடில் பொருளாதார வளர்ச்சி நிலைக்காது என்பதை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக நிலைத்தன்மை பேணப்பட வேண்டும் என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், இன்றைய அரசு நில உரிமையைப் பெரும்பான்மைக்கும், கண்ணீரைச் சிறுபான்மைக்கும் பரிசாக வழங்குகிறது. கடந்த 55 வருட காலத்தில் பல ஜனாதிபதிகளை நாங்கள் கண்டுள்ளோம். அவர்கள் எமக்கு இத்தகைய நெருக்கடிகளைத் தந்ததில்லை. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விவசாய மானியங்கள் எமக்குக் கிடைத்தன. ஆனால், இந்த அரசு எம்மை அவமானப்படுத்தி, எமது பூர்வீக நிலங்களிலிருந்து அராஜகமாக வெளியேற்றியுள்ளது.

முந்தைய அரசுகளுக்கு எதிராக எம்மைத் தூண்டிவிட்டு, எமக்காகப் போராடுவதாகக் கூறி நில உரிமையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியளித்த அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள், இன்று ஆட்சிக்கு வந்ததும் அதே ஏகாதிபத்தியச் சக்திகளிடம் எமது வயல் நிலங்களைத் தாரைவார்க்கிறார்கள். இது கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு ஒப்பானது. மேலும், அவர் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தவறான தகவல்களை வழங்கி வருகின்றார்.

கந்தளாயில் 11,000 ஏக்கர் அரச காணிகளைப் பெரும்பான்மை மக்களுக்கு வழங்கிய அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இதுதான்: ‘முத்துநகர் விவசாயிகள் 1,200 ஏக்கரில் கடந்த 55 வருடங்களாகக் கஞ்சாவா பயிரிட்டார்கள்?’

IMF அதிகாரிகளே! எங்கே இருக்கிறது சமூக நிலைத்தன்மை? ஜனநாயக ரீதியாகப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆகவே, வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கையை மீட்க முயற்சிப்பது போல, கண்ணீரில் வாழும் முத்துநகர் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுங்கள். அரசு செய்யாததை IMF செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

காஸா, பாலஸ்தீனம் மற்றும் ஈரானுக்காகக் குரல் கொடுக்கும் உங்கள் நேர்மை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, உங்களோடு வாழும் சக சகோதரர்களாகிய எமக்கும் கொஞ்சம் குரல் கொடுங்கள். எமது ஒற்றுமையே எமது பலம்!”

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக