சித்ரா பௌர்ணமியின் ஆன்மிக முக்கியத்துவம்

2026-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 01 (சித்திரை 18) வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தமிழ் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமி, தமிழர்களின் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாள் ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, பண்பாட்டு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சித்ரா பௌர்ணமியின் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்து விரிவாக காண்போம். தமிழர்களின் பாரம்பரியக் காலண்டரில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்களில் ஒன்று சித்ரா […]
ஈரான் அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல் – ரொயிட்டர்ஸ்

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் நேற்று (30) அறிவித்துள்ளது. இது ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவதற்கான அமெரிக்கத் திட்டங்களைச் சிக்கலாக்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய போர் இரண்டு மாதங்களைக் கடந்தும், முக்கிய கடல் பாதையான நீரிணை மூடப்பட்டே உள்ளது. இது உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு […]
பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது. இன்று (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 49 […]
கடத்தி வரப்பட்ட 994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

புத்தளம், பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 994 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பாலாவி பகுதியில் விசேட வீதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சுங்க வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 994 கிலோ […]
மே தின பாதுகாப்பு குறித்து…
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களை உள்ளடக்கியதாக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மே […]
அராலியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பணிப்பெண் ஒருவரின் ஊடாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பல தடவைகள் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை […]
அரிசியை அதிக விலைக்கு விறற்றவருக்கு அபராதம்

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்கரைப்பற்று பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த வர்த்தக நிலையம் 2 கிலோ அரிசியை 800 ரூபாவிற்கு, […]
சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர். பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது. 1886 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி போராட்டத்தின் தீர்மானமிக்க தருணம். முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய […]
பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கமானது 2.2 சதவீதமாக பதிவாகியிருந்தது. அதேநேரம் கடந்த மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிரித்துள்ளது. இது தவிர உணவல்லா பணவீக்கமானது கடந்த மார்ச் […]