களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கணினித் தரவு அமைப்பு அமைந்துள்ள பகுதியிலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் அல்லது தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
களுத்துறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.