தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தொடர் தாக்குதல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது

கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் குறித்த இலங்கை கடற்றொழிலாளரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற,காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நண்டு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களுக்கு குறித்த நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கடற்றொழிலாளர் கடற்கொள்ளையராக இருந்தால் அவரை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தி இருக்க முடியும். இரண்டு நாடுகளுக்குமான ராஜதந்திர முறை இருக்கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும். அது முறையாக விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக கையாளப்பட வேண்டும்.

அதை விடுத்து சக கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீங்கள் தண்டனை கொடுக்க அல்லது பிடித்து அவர்களை இரண்டு பேருக்கும் மாறி மாறி இலங்கையில் இருக்கின்ற கடற்றொழிலாளர்களும் தமிழ்நாட்டில் இருக்கிற கடற்றொழிலாளர்களுக்கும் இடையே நீங்கள் அந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டீர்கள் என்றால் இது ஒரு பெரிய ஆபத்தான நிலையை உருவாக்கும். தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தியா கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது.

குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் தான் கண்டிக்கலாம். அதற்கான தீர்ப்பு வழங்கலாம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரங்கள் கவனமாகவும், கௌரவமாகவும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் பார்க்கும்போது ஒரு கடற்றொழிலாளர் அவர் என்ன குற்றம் செய்திருக்கலாம்? ஆனால் அதை நீதிமன்றங்கள் தான் கையாள வேண்டும். அதற்கான விசாரணை செய்து முறையான தண்டனைகள் அவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

Gotabaya-Rajapaksa

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA)

vasu11111111111

சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

June 16, 2026

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது.

acci main

ஹட்டன் – கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

June 16, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100

Yoshitha-Rajapaksa (1)

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

June 16, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch

1200-675-26926160-thumbnail-16x9-madurai

சாத்தான்குளம் வழக்கு! – மேல்முறையீட்டு மனுவிற்கு ஸ்ரீதர் தரப்பிற்கு நீதிமன்றம் அவகாசம்!

June 16, 2026

மதுரை: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய

2

“தவெக-வில் இணையறீங்களா?” – இரட்டை இலையைக் காட்டி செல்லூர் ராஜூ மாஸ் பதில்!

June 16, 2026

மதுரை: மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சைகை அரசியல்

1

“என்ன செய்கிறது சிங்கப்பெண்கள் படை?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

June 16, 2026

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட

Malcolm-Cardinal-Ranjith

அருட்தந்தை சிறில் காமினி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – இரத்தினபுரி போதம்ம தேரர்

June 16, 2026

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை

Uthaya

கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – உதய கம்மன்பில

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள

acci main

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோர விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

June 16, 2026

கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும்

jud

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

June 16, 2026

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும்

e

உக்ரைனில் வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் தீக்கிரை

June 16, 2026

உக்ரைனின் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா விடியற்காலையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்