சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது. எனினும் அதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டியது அவசியமென்பதால் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகள், தற்போதைய அரசியல் சூழலில் தேவையற்ற ஒரு குழப்பத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தமுழு விவகாரமும் தற்போதைய நிலையில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான ஊடகங்கள் அனைத்தும் இதையே முதன்மைப் படுத்திச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சலே தொடர்பில் நாட்டில் இருவேறு அரசியல் கருத்துக்கள் மோதிக்கொள்வதை நாம் காண்கின்றோம். கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்காகவே சுரேஷ் சலேயின் வழிநடத்தலில் உயிர்த்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்ஷவை இவ்விவகாரத்தில் சிக்க வைப்பதற்காகவே சலே கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இவ்வாறு இருவேறு அரசியல் தரப்புகள் மோதிக்கொள்வதால் தேவையற்ற குழப்பநிலையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை ஒரு சாதாரண விசாரணைப் போக்கில் கொண்டு செல்ல அனுமதித்திருக்க வேண்டும். சலேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அங்கு அவர் வழங்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அடுத்தகட்டத் தீர்மானத்தை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து, தற்போது சகல தரப்பினரும் பிரிந்து நின்று, முழுப் பிரச்சினையையும் ஒரு அரசியல் பகையாகவும் மோதலாகவும் மாற்றியுள்ளனர்.

சுரேஷ் சலே என்பவர் நாட்டின் ஒரு முக்கிய இராணுவ அதிகாரி என்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எத்தனையோ முக்கிய இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், தண்டனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில், இந்த விவகாரத்தை மாத்திரம் ஏன் இவ்வளவு பெரிய அரசியல் விவாதமாக மாற்ற வேண்டும்? இருதரப்பிலும் முன்னெடுக்கப்படும் விவாதங்கள் காரணமாகவே இந்த முழுப் பிரச்சினைக்கும் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசாங்கமும் தமக்கு நம்பிக்கையற்றவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதில்லை. எனவே, இந்த அரசாங்கத்தின் கீழ் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பதவிகளைப் பெற்றுக்கொண்டமை குறித்து குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.

எமக்குத் தேவை நீதிமன்றத்தின் ஊடாக இந்த விவகாரத்துக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதாகும். இந்த விடயம் ஒரு வழக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, அங்கு நடைபெறும் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சி விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஒரு தீர்ப்பை வழங்குவார்கள். நாம் செய்ய வேண்டியது அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்தின் ஊடாகப் கருத்துக்களை முன்வைப்பதே தவிர, வெளியில் இருந்து கொண்டு தேவையற்ற அரசியல் குழப்பங்களை விளைவிப்பது அல்ல. அவ்வாறு செய்வது நாட்டின் நீதித்துறையையும் சட்ட நடைமுறைகளையும் அரசியலோடு குழப்பிக் கொள்ளும் ஒரு நிலையையே ஏற்படுத்தும்.

இதேவேளை, சலே தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணைகளின் போதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் போதோ, கைதிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது இன்று நேற்று நடக்கும் ஒரு விடயமல்ல. அது கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. அத்தகைய அத்துமீறல்கள் அல்லது துன்புறுத்தல்களை எவரும் அங்கீகரிக்க முடியாது. அது குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும்.

Gotabaya-Rajapaksa

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA)

vasu11111111111

சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

June 16, 2026

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது.

acci main

ஹட்டன் – கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

June 16, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100

Yoshitha-Rajapaksa (1)

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

June 16, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch

1200-675-26926160-thumbnail-16x9-madurai

சாத்தான்குளம் வழக்கு! – மேல்முறையீட்டு மனுவிற்கு ஸ்ரீதர் தரப்பிற்கு நீதிமன்றம் அவகாசம்!

June 16, 2026

மதுரை: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய

2

“தவெக-வில் இணையறீங்களா?” – இரட்டை இலையைக் காட்டி செல்லூர் ராஜூ மாஸ் பதில்!

June 16, 2026

மதுரை: மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சைகை அரசியல்

1

“என்ன செய்கிறது சிங்கப்பெண்கள் படை?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

June 16, 2026

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட

Malcolm-Cardinal-Ranjith

அருட்தந்தை சிறில் காமினி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – இரத்தினபுரி போதம்ம தேரர்

June 16, 2026

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை

Uthaya

கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – உதய கம்மன்பில

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள

acci main

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோர விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

June 16, 2026

கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும்

jud

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

June 16, 2026

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும்

e

உக்ரைனில் வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் தீக்கிரை

June 16, 2026

உக்ரைனின் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா விடியற்காலையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்