சிறப்பு விசாரணையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு அறிவிப்பு இன்னமும் வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை மேற்கொள்ளவதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும் என்பதுடன் சட்டத்தை மீறும் செயலாகும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில் எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் மிகவும் முக்கியமான வழக்குகளை அதன் முக்கியத்துவம் கருதி அந்த வழக்கு விசாரணையை விசேட சிறப்பு விசாரணையாக ரயல் அட்பார் முறையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மாத்திரமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை 3ஆவது தரப்பு கையில் எடுப்பதற்கு முயற்சிக்குமானால் அது முற்றாக சட்டத்தை மீறும் செயலாகும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை இவ்வாறு சிறப்பு விசாரணையாக மேற்கொள்ளப்போவதாக ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாறு சிறப்பு விசாரணைமேற்கொள்வதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும். அது பிரதம நீதியருக்கு செய்யும் அகெளரவமாகும்.

அத்துடன் வழக்கு விசாரணைகளின்போது ஒருவருக்கு குற்றப்பத்திரம் கையளிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரமே இருக்கிறது. சட்டமா அதிபர் அதனை தீவிரமாக ஆராய்ந்து, சுயாதீனமாக பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எந்த அழுத்தங்களும் அவருக்கு இருக்கக்கூடாது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலையில் இருக்கும்போது சுகயீனமுற்ற நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு எமது நாட்டில் இருக்கும் உயர் பதவிகளில் இருக்கும் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் 7பேர் சிகிச்சை வழங்கி, அவரின் சுகாதார நிலைமை தொடர்பில் அறிக்கை வழங்கி இருந்தனர்.

ஆனால் அறிக்கை வழங்கிய இந்த விசேட வைத்திய நிபுணர்கள் 7 பேரும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். தொழில் ரீதியாக அவர்கள் தங்களது கடமையை செய்ததனால், இறுதியில் அவர்கள் பாரிய குற்றம்

செய்தவர்கள்போல் குற்றப்புலனாய்வுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இதனால் அந்த வைத்தியர்கள் பெரும் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

நாட்டில் இருக்கும் சிறந்த வைத்திய நிபுணர்கள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பாத ரணில் விக்ரமசிங்க, சுயமாக தீர்மானித்து, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார். இவ்வாற நிலை தொடருமானால்

நாட்டில் இருக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், பிரபலமான அரசியல் தலைவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன்வரமாட்டார்கள். இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

அதனால் நாட்டில் இருக்கும் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் எந்த அழுத்தங்களுக்கும் உட்படாமல் தங்களின் கடமையை செய்யக்கூடிய நிலைமை இருக்க வேண்டும்.

நாட்டில் சிறந்த வைத்தியர்கள் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க ஏன் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என நாட்டுக்குள் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருவதால், நாட்டு மக்கள் இதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கே இந்த விடயங்களை தெரிவிக்க தீர்மானித்தோம் என்றார்.

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள