உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் நெதன்யாகு – புடின் – ட்ரம்ப் முக்கியபங்கு! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) கடுமையாகச் சாடியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தனது வருடாந்த அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரை “வெறிபிடித்த வேட்டைக்காரர்கள்” என அந்த அமைப்பு வர்ணித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்! பேச்சுவார்த்தைகள் கைகூடாத […]

எதிர்வரும் 26ம் திகதி: தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்த விருது விழா

தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்திர ‘தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பரிசில்கள்’ வழங்கும் விழா, எதிர்வரும் 26.04.2026 அன்று மாலை 3:00 மணிக்கு கொழும்பு-14, கலைமகள் தமிழ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மன்றத்தின் தலைவர் வீ. செல்வநாயகம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. மன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் சந்தனம் அவர்களின் தன்னலமற்ற சேவைகளைக் கௌரவிக்கும் முகமாக, அன்றைய தினம் பாடசாலைப் பிரதான மண்டபம் ‘சந்தனம் அரங்கு’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதி: […]

மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அக் கட்டிடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது. மெனிக்ஹின்ன நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மிக வேகமாக பரவியதன் காரணமாக கட்டிடத்தில் இருந்த ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் […]

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் கப்பல் மீது ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மற்ற இரண்டு சரக்குக் கப்பல்கள் யாரால் தாக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க முற்றுகையைத் […]

கொள்கலன் விவகார விசாரணை: முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க எதிர்க்கட்சி கோரிக்கை

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, முன்னாள் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு ஆகியோர் அழைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா […]

2.5 மில்லியன் டாலர் மோசடி: திறைசேரியின் கட்டுப்பாடு குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி

தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல, மாறாக அது திறைசேரியின் (Treasury) மேற்பார்வை மற்றும் உள்நாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மிக உயர்ந்த மட்டத்திலான அமைப்புகள் தோல்வியடையும் போது, மேற்பார்வை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களைப் […]

“எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்காக ’தாழ்தள’ பஸ் சேவை ஆரம்பம்

லங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பிரத்யேக “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை நேற்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி […]

கிளிநொச்சியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது செவ்வாய்க்கிழமை (21) மாலை மோதியுள்ளது. இந்த விபத்தில் தர்மராசா என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை […]

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற செல்சி

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது. பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 58 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி […]

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரிடம் நேரில் முறையிட்டனர். பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கையில்: சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட ‘டிட்வா’ […]