கொள்கலன் விவகார விசாரணை: முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க எதிர்க்கட்சி கோரிக்கை

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, முன்னாள் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு ஆகியோர் அழைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா […]

2.5 மில்லியன் டாலர் மோசடி: திறைசேரியின் கட்டுப்பாடு குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி

தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல, மாறாக அது திறைசேரியின் (Treasury) மேற்பார்வை மற்றும் உள்நாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மிக உயர்ந்த மட்டத்திலான அமைப்புகள் தோல்வியடையும் போது, மேற்பார்வை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களைப் […]

“எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்காக ’தாழ்தள’ பஸ் சேவை ஆரம்பம்

லங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பிரத்யேக “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை நேற்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி […]

கிளிநொச்சியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது செவ்வாய்க்கிழமை (21) மாலை மோதியுள்ளது. இந்த விபத்தில் தர்மராசா என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை […]

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற செல்சி

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது. பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 58 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி […]

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரிடம் நேரில் முறையிட்டனர். பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கையில்: சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட ‘டிட்வா’ […]

இலங்கையில் நடிகர் சூர்யா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான UL122 என்ற விமானத்தில் அவர் பயணித்தார். விமானத்தினுள்ளும், விமான நிலையத்திலும் அவர் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. நடிகர் சூர்யாவின் இந்தத் திடீர் இலங்கை வருகைக்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், படப்பிடிப்புத் தளம் […]

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு சோசலிச மக்கள் மன்றம் கண்டனம்

தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வனின் பல இலக்கியப் படைப்புகள் வாரக்கணக்கில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சோசலிச மக்கள் மன்றம் (Socialist People’s Forum) தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் அரசின் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறியுள்ளது: முதலாவதாக, முற்போக்கான தோற்றம் கொண்ட அரசாங்கங்கள் கூட இனவாத மற்றும் மேலாதிக்கக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கே […]

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்: எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்க தயாரிப்பு தரப்பு கடும் எதிர்ப்பு!

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களுக்குப் பிறகு திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் தொடர்பாகச் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், […]

தங்கத்தின் விலையில் மாற்றம்!

கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று […]