எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது. இந்தத் தீவகப் பகுதி மக்கள் எதிர்பார்த்திராத பல மிகப் பெரிய அபிவிருத்திகள் இனி நடக்கும். அந்த நல்ல மாற்றங்களை இங்குள்ள மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட பங்கேற்புடன் இன்று (22.04.2026) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.

இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இந்த இறங்குதுறையானது 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்திலேயே புனரமைக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய தொகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவிகள் ஊடாகவே செய்யப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொந்த நிதியில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டம் தீவக மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். இதற்காக உழைத்த  அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் துரித கதியில் அபிவிருத்திகள் நடைபெறுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது தேவையற்ற கருத்துகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையில், அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்துக்கு அரசாங்கம் காரணமல்ல. ஒரு சில அரச திணைக்களங்கள்தான் அதற்குக் காரணமாகின்றன. அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு, அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும், என்றார் ஆளுநர்.
இந்தக் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் இன்று

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle

canada bank gover

பொருளாதார மந்தநிலை (Recession) என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்’: கனடா வங்கி ஆளுநர்

June 10, 2026

கனடா வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மேக்லம் (Tiff Macklem), இதுவரை தாம் பார்த்த தரவுகளின்படி, நாட்டின்

4CLOLKCC2FG3RAQOW6ITDCPJGY

வடக்கு ஒன்டாரியோவில் கொல்லப்பட்ட பிராம்ப்டன் OPP அதிகாரி தருண் பாலி: நாம் அறிந்தவை

June 10, 2026

செவ்வாய்க்கிழமை மதியம் வடக்கு ஒன்டாரியோவில் பணியின் போது கொல்லப்பட்ட ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி தருண் பாலி, பிராம்ப்டனைச்

court-judge-hammer-gavel-696x398

அரசு வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த விவகாரம்: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

June 10, 2026

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத்

Screenshot_20260610_143451_Instagram

போலி கனடா கடவுச்சீட்டு மூலம் லண்டன் செல்ல முயற்சி: தாய்லாந்து விமான நிலையத்தில் இலங்கை நாட்டவர் கைது

June 10, 2026

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், போலி கனடா நாட்டு கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி

721089767_10242010452096412_6680718909023026465_n

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு இன்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது

June 10, 2026

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி

dailythanthi_2026-06-10_7scngxem_Untitled-11

“10, 12-ம் வகுப்பில் மாஸ் காட்டிய மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் ஊக்கத்தொகை!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

June 10, 2026

சென்னை ‘சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம்

kizhakkunews_2025-10-29_bqqnv4dz_CTR-NirmalKumar (1)

“மின்தடையை ஏற்படுத்தி தவெக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இமாலய சதி!” – 125 அதிரடி ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்து அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு!

June 10, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் எவ்வித மின்சாரத் தட்டுப்பாடும் துளியும் இல்லை; ஆனால், ஆங்காங்கே வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்திப்

che

21ஆம் நாள்; செம்மணி மனிதப் புதைகுழியில் 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம்

June 10, 2026

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 7

image_a55b9f0e51

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா ஜூன் 12 வரை விளக்கமறியலில்

June 10, 2026

கொழும்பு: தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால் டி சில்வா, கொழும்பு பிரதம நீதவான்

doctor11

பெர்த்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இலங்கை மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 10, 2026

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை