கிளிநொச்சியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது செவ்வாய்க்கிழமை (21) மாலை மோதியுள்ளது. இந்த விபத்தில் தர்மராசா என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை […]

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற செல்சி

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது. பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 58 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி […]

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரிடம் நேரில் முறையிட்டனர். பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கையில்: சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட ‘டிட்வா’ […]

இலங்கையில் நடிகர் சூர்யா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான UL122 என்ற விமானத்தில் அவர் பயணித்தார். விமானத்தினுள்ளும், விமான நிலையத்திலும் அவர் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. நடிகர் சூர்யாவின் இந்தத் திடீர் இலங்கை வருகைக்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், படப்பிடிப்புத் தளம் […]

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு சோசலிச மக்கள் மன்றம் கண்டனம்

தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வனின் பல இலக்கியப் படைப்புகள் வாரக்கணக்கில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சோசலிச மக்கள் மன்றம் (Socialist People’s Forum) தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் அரசின் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறியுள்ளது: முதலாவதாக, முற்போக்கான தோற்றம் கொண்ட அரசாங்கங்கள் கூட இனவாத மற்றும் மேலாதிக்கக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கே […]

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்: எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்க தயாரிப்பு தரப்பு கடும் எதிர்ப்பு!

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களுக்குப் பிறகு திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் தொடர்பாகச் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், […]

தங்கத்தின் விலையில் மாற்றம்!

கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று […]

ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்!

ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்கள், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கொள்கலன் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கப்பல் சேதமடைந்ததுடன், பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்ததின்படி, இன்று(22) புதன்கிழமை காலை 7.55 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கப்பல் எந்தவித எச்சரிக்கையும் பெறாமல் கார்டு படகால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த […]

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சக சட்ட அதிகாரி கைது!

சுகாதார அமைச்சகத்தின் ஓய்வுபெற்ற தலைமை சட்ட அதிகாரியான அஹ்மத் ரியாஸ் அஹ்மத், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, மே 5, 2026 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், ஒரு முறைப்பாட்டை விசாரித்த பின்னர், அதன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் சந்தேக நபரை கைது செய்ததை உறுதிப்படுத்தியது. இலஞ்ச ஆணையத்தின்படி, சட்ட அதிகாரியாகப் பணியாற்றியபோது, ​​சுகாதார அமைச்சகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட ஒரு கட்டிடத்தின் […]

நாளை ஜனநாயகத் திருவிழா: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு! 1.47 லட்சம் போலீசார் குவிப்பு!

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஏப்ரல் 23, வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு […]