சென்னை,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.3.02 கோடி (மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு) பணம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் ‘விஜய் தனது தந்தைக்கே கடன் கொடுத்துள்ளார்’ என விவாதப் பொருளானது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “அக்கவுண்ட் புக்கில் அப்பாவுக்கு இவ்வளவு கொடுத்துள்ளேன் என்று எழுதியதைத்தான் அவர் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். அதை ஏன் எல்லோரும் ‘கடன்’ என்று தவறாகப் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. 200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒரு பிள்ளை, தனது தந்தைக்காக ஒரு 5 கோடி ரூபாய் கொடுக்கக் கூடாதா? அவர் ‘கொடுத்தேன்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளார்; எங்கேயும் ‘கடனாகக் கொடுத்தேன்’ எனக் குறிப்பிடவில்லை. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசத்தை இப்படி விமர்சிப்பது சரியல்ல” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
#Vijay #TVK #SAChandrasekhar #VijayPolitics #TNElection2026 #VijayAffidavit #TamilPolitics #TVKChiefVijay #FatherSonBond #Election2026 #PeramburConstituency #TrichyEast #VijayCampaign #TamilNaduElections #SAC #VijayFamily #SocialMediaTrend #PoliticalNews #VijayVsDMK #ViralSpeech