இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள் கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எவ்வித தடையுமின்றி இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்கரையை அண்மித்து வருகைதந்து கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும்வரையில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

இவ்வாறு அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதார வளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர். இது எமக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
அத்து மீறி எமது கடற்பரப்புகளுக்குள் உள்நுழையும் இந்திய இழுவைப் படகுகளை கடற்படையினருக்குத் தெரிவதில்லையா?

அல்லது அத்து மீறி எல்லைதாண்டி எமது நாட்டுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைபவர்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கடற்படையினரிடமுள்ள கருவிகள் பழுதடைந்துள்ளனவா?

அவ்வாறு கடற்படையினரிடமுள்ள கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள். நாம் ஜனாதிபதியுடன்பேசி புதிய கண்காணிப்பு கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடுக்கை மேற்கொள்வோமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதன்போது கடற்படை அதிகாரி பதிலளிக்கையில், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக 24மணித்தியாலங்களும் கடற்படையினர் கண்காணிப்புக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் ரேடார் கருவிகள்மூலம் கண்காணித்து அவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் கடற்படை அதிகரியினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

air canada157

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

April 23, 2026

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா

_117337117_963b4151-687c-47fd-b0e9-e50e4faf5f6a.jpg

மாலை 5 மணிக்கே சாதனை! தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல் – 82.24% வாக்குப்பதிவு!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும்

Harshana-Suriyapperuma

திறைசேரி நிதி மாயம்: மின்னஞ்சல் ஊடாக ஊடுருவிய ஹேக்கர்கள் – நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

April 23, 2026

திறைசேரியிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதியில், முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக

kanamal

யாழில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடாத்திய விசேட சந்திப்பு

April 23, 2026

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை

Mujibar Rahuman

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

April 23, 2026

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு

warnig

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

April 23, 2026

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி

government

மொழிகளை பணிகளில் பயன்படுத்துவது குறித்த பின்தொடர் பொறிமுறை

April 23, 2026

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைப் படித்த ஊழியர்கள் அதனை பணிகளில் பயன்படுத்துவது குறித்து ஒரு பின்தொடர் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு நீதி

fue

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

April 23, 2026

இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய

he

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

April 23, 2026

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

hur

அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

April 23, 2026

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச்

rob

வட தமிழக தேர்தல் களத்தில் ரொபோக்கள்

April 23, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தி இளம் வாக்காளர்களை கவர்ந்து

is

தீர்க்கப்படக்கூடிய சில சிறிய எல்லைப் பிரச்சினைகளே லெபனானுடன் எங்களுக்கு உள்ளன

April 23, 2026

அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் இன்று (23) நடைபெறும் சூழலில், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான்