ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம் எனவும் இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகக் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ‘லன்டேன்’ செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இ சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இந்தச் செயற்றிட்டமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், சர்வதேச குடிவரவு அமைப்பு மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் கூட்டுப் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியீட்டத்தில், 24 மாத காலப்பகுதிக்கு இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,000 ஏக்கர் காணிகளை அரசினால் விடுவிப்பதற்கும், 1,000 நபர்களுக்கு முறையான காணி உறுதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கும் இலக்கு முதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக சுமார் 1,500 குடும்பங்கள் நேரடியாகவும், 200,000 பேர் வரை மறைமுகமாகவும் பயனடையவுள்ளனர்.
காணி முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலம் அரசிற்கும் சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துதல், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் துரிதப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ‘வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் காணிப் பிரச்சினையே பிரதான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. போர் காரணமாகப் பொதுமக்களும் அரச திணைக்களங்களும் காணி தொடர்பான ஆவணங்களை முழுமையாக இழந்துள்ளமையால், இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், இந்தச் செயற்றிட்டமானது எமது மாகாணத்துக்கு மிகவும் அவசியமானதாகும். இதனைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும். எமது மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் முன்னோடித் திட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தையும் இந்த முன்னோடித் திட்டத்தில் உள்வாங்க முடியுமாக இருந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும். மேலும், காணித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அத்திணைக்களம் வலுப்படுத்தப்படுவது எதிர்காலத்தில் எமது மாகாணத்துக்குப் பெரும் பயனை அளிக்கும்,’ எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின்போது, இந்தத் திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக முன்கொண்டு செல்வது மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும், ஐ.நா. முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விரிவான ஆராய்வுகள் இடம்பெற்றன.
இந்த விசேட கூட்டத்தில் மத்திய காணித் திணைக்கள அதிகாரிகள், மத்திய விவசாய அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்டச் செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்
725147385_963435430006083_3681308214476639100_n

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

June 19, 2026

அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை