தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட பெண் வைத்தியர் டாக்டர் கிருசாந்திக்கு எதிராக, எவ்வித ஆதாரமும் இன்றி அர்ச்சுனா பரப்பிய அவதூறு வீடியோக்கள் அனைத்தையும் இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எவருக்கும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க பேச்சு சுதந்திரம் […]

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வெள்ளிக்கிழமை (19.06.2026) நடந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது காட்டமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளது பங்குபற்றுதல் இல்லாமல் இரகசியமாக நடாத்தப்பட்டுக் காணி வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையையும் அவர் அம்பலப்படுத்தினார். எனினும், மக்கள் காணிகள் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிப் பதவிக்கு வந்த […]

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வெள்ளிக்கிழமை (19.06.2026) நடந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது காட்டமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளது பங்குபற்றுதல் இல்லாமல் இரகசியமாக நடாத்தப்பட்டுக் காணி வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையையும் அவர் அம்பலப்படுத்தினார். எனினும், மக்கள் காணிகள் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிப் பதவிக்கு வந்த […]

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. அத்துடன் கடந்த காலத்தில் எப்போதும் நடைபெறாத ஒரு நிகழ்வு இன்றைய கூட்டத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதால் கூட்டத்தில் தத்தமது பிரதேச பிரச்சினைகள் சார் கருத்துக்களை கூறவந்த பொது அமைப்புகளின் பிரதினிதிகளது குரல்கள் அடக்கப்பட்டதுடன் அவர்கள் […]

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான விபத்துத் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இவ்விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே ஆவர். இக்காலப்பகுதியில் வீதிகளில் நடந்து சென்ற 448 பாதசாரிகள் […]

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்தொடர்பான நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா,இ.இந்திரராஜா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்றது. சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளது. அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள […]

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகிலுள்ள பர்கன்ஸ்டாக் மலை உச்சி ரிசார்ட்டில் இன்று வெள்ளிக்கிழமை இப்பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான தனது சுவிஸ் பயணத்தை திடீரென இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவுமூ நள்ளிரவில் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்றையதினம் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்பதை […]

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுப்பனவுக்கும் வங்கிகள் மூலம் சிறப்புப் பரிவர்த்தனை எண் ஒன்று வழங்கப்பட வேண்டும். அத்துடன், […]

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி ஆதிக்கத்தை செலுத்தியது. ஆட்டத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கட்டார் அணியின் வீரர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தமக்கு சாதமாக மாற்றி கனடா அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில் ஜொனாதன் டேவிட் ஹட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கத்தார் அணியின் தற்காப்புப் பிழைகள் மற்றும் பலவீனமான தடுத்தல் ஆட்டத்தை அவர் […]