தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

திமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு எதிராக நேற்று வியாழக்கிழமை (26) உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் பெற்றோர் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31ஆம் திகதி தனது தீர்ப்பை அறிவித்தது. குறித்த வினாத்தாள் கசிந்ததன் மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியது.

இந்த பாரிய பரீட்சை மோசடிக்கு முக்கிய பொறுப்புதாரியாகக் கண்டறியப்பட்ட தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க, தனது சொந்தப் பணத்திலிருந்து 3 மில்லியன் ரூபாவை நட்டஈடாக அரசுக்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், குறித்த தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செலுத்தி முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும், நீதிமன்றம் விதித்த அந்த நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறியமை மற்றும் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தியமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி இதுவரை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கமைய, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் பணிப்பாளருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை வாசித்துக் கையளிக்கப்பட்டது.

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை