தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – விஜேதாச ராஜபக்ஷ

நெருக்கடி நிலைமைகளின்போது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட செயற்பட்டபோது, தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படாமல் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. அது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய யுத்த நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இதனையும்விட எரிபொருள் நெருக்கடி நிலைமை 2022 ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டது. அப்போது இருந்த அரசாங்கத்துக்கு, நாட்டை நிர்வகிக்க முடியாமல் இருந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில், நாங்கள் நாட்டை பொறுப்பேற்று, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துகொண்டு நாங்கள் அந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்த்தோம்.

என்றாலும் அன்றிருந்த நெருக்கடி நிலைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாவசம் என்னவென்றால், அன்று நெருக்கடி நிலைமையை பயன்படுத்திக்கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் குழுகள் முழுநாட்டிலும் தீமூட்டி, வீடுகளை எரித்து கொள்ளையடித்தன. இன்று இந்த அரசாங்கத்துக்கு கீழ் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கும்போது யாரும் தீ மூட்ட வரவில்லை. பாராளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு யாரும் வருவதில்லை. மாறாக நாட்டு மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன, அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அத்துடன் தற்போதைய அசாதாரண நிலைமை சுமுக நிலைக்கு வருவதற்கு என்னும் எவ்வளவு காலம் செல்லும் என தெரியாது. என்றாலும் அமெரிக்காவும் ஈரானும் விரைவாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால், குறுகிய காலத்தில் இந்த பிரச்சினை தீர்வதற்கு இடமிருக்கிறது.

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கம் மக்களுக்கு முடியுமான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலையில் நாங்கள் ஆட்சி செய்யும்போது, தற்போதுள்ள அரசாங்கம், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வந்தது. துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளுக்கான வருமானத்தை குறைத்து மக்களுக்கு நிராணம் வழங்குவதாகவே அவர்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். அவர்களின் வாக்குறுதியின் அடிப்படையிலே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

அன்று எரிபொருளுக்கான வரி யாருடையயாவது பொக்கெட்டுக்கு சென்றிருந்தால், இன்று எரிபொருள் விலை குறைவடையாவிட்டால், அந்த பணம் இன்றும் யாருடையயாவது பொக்கெட்டுக்கு செல்ல வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் எரிபொருள் விலை குறைவடைய வேண்டும் என்றார்.

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை

725611159_1536223961236185_8994205704252386807_n

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

June 19, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற