அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நானாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமெரிக்கா, ஈரான் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்று, சமாதானம் ஏற்படுவதற்கு இருக்கும் நிலையிலே இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஓமான வெளிவிவகார அமைச்சர் இருந்துள்ளார். அவர் இந்த சமாதானம் தொடர்பில் உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்கு தயாராகி வரும்போதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதனால் இந்த தாக்குதலை ஆரம்பித்தவர்கள் யார் என்பது தெளிவாகிறது.

இந்த யுத்தத்தின்போது அரசாங்கம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் உண்மையில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருப்பது தொடர்பில் எதிர்க்கட்சியாகிய நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இந்த நிலைமையில் நாங்கள் எடுக்கும் நிலைப்பாடு மிகவும் முக்கியமாகும்.

சுதந்திரத்திற்கு பின்னர் எமது தலைவர்கள் வெளிநாட்டு கொள்கை அடிப்படையில் எமது நாட்டை கெளரவமான ஒரு நிலைக்கு கொண்டுவந்த முறை தொடர்பில் பல உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் மகா யுத்தத்தின்போது ஜேஆர் ஜயவர்த்தன ஐக்கிய நாடுகள் மாநாட்டின்போது, தர்ம போதனை வாக்கியம் ஒன்றை சுட்டிக்காட்டி ஆற்றிய உரை எமது மிகவும் முன்மாதிரியாகும். அதேபோன்று சிறிமா அம்மையார், இந்திய சமுத்திர வலயம் சமாதான வலயமாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்காெண்ட பிரேரணை எமக்கு மேற்கொண்ட பாரிய சக்தியாகும். இதுவும் எங்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும். அதேபோன்று இந்திய சீனா மோதலின்போதும் சிறிமா அம்மையார் இலங்கையை அதில் தலையிடச்செய்து இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இது வெளிநாட்டு கொள்கையில் உயர்ந்த நிலைக்கு சென்ற முன்மாதிரியாகும்.

ஆனால் இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் அவ்வாறான சாதகமான எந்த நடவடிக்கையையும் நாங்கள் இதுவரை காணவில்லை. ஈரான் கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு 11 மணித்தியாலம் வரை அனுமதி வழங்காமல் இருந்தது, வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையிலா என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் முதலாவது கப்பல் தாக்கப்படும்வரை காத்திருந்துவிட்டு, ஈரானின் இரண்டாவது கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்கியிருந்தது, அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையின் பிரச்சினையால் ஏற்பட்ட நிலையா என்ற பிரச்சினை எமக்கு இருக்கிறது.

மேலும் எமது வெளிநாட்டு கொள்கையில் வேறு தரப்பினரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இது இலங்கையில் சுயாதீனத்தன்மை தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.இதன்போது எமது நாட்டுக்குள் செயற்பட வேறு நாட்டின் அனுமதியை பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? இது பாரிய பிரச்சினையாகும். சர்வதேச ஊடகங்களிலும் எமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

எனவே இந்த யுத்தத்தின்போது நாங்கள் நாடுநிலையாக இருந்தாலும் உறுதியான வெளிநாட்டு கொள்கை இருக்க வேண்டும். வரலாற்றில் எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் வெளிநாட்டு கொள்கையில் நாட்டுக்கு கெளரவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்து வந்துள்ளது என்றார்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க