பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் உண்மை வெற்றி பெறும் – சஜித்

ல்லிணக்கப் பொறிமுறையை வலுப்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் அனைத்து இனம், மதம், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (13) கொழும்பு நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்த போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் வழியாக எவ்வளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பயணம் சரியானதாக இருந்தால், பொறுமையுடன் இருந்தால், அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு நாள் உண்மை வெற்றி பெறும். நான் உறுதியாக நம்புவது போல உண்மை வெற்றி பெறும்.

அன்று ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பழிக்கு பழி வாக்கெடுப்பு கொண்டு வந்த தருணத்தில் ஆதரவாக நின்றது முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தான். அன்று முதல் நான் மகா சங்கத்தினரையும் மத தலைவர்களையும் மதிக்கின்றேன். அது ஒருபோதும் மாறாது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR) கீழ் மதங்களையும் மத தலைவர்களையும் மையமாகக் கொண்டு வெறுப்பை பரப்பும், சமரசத்தை சிதைக்கும் கூற்றுக்களை தடுக்க வேண்டும். அதற்கும் மேலாக நாட்டின் ஒற்றுமையையும் கூட்டுறவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்று, அனைத்து மதங்கள், மக்கள் பிரிவுகள், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை நிறுவி, அதன் மூலம் இந்த பிரச்சனைகளை கலந்து பேச வேண்டும். இனவாதம், மதவாதம், வர்க்க பாகுபாட்டை உண்டாக்க அனுமதிக்க முடியாது.

அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளவாறு புத்த சாசனத்தை பாதுகாப்பதோடு, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களையும் பாதுகாக்க செயல்பட வேண்டும். இந்த இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின்படி மகா சங்கத்தினரை அவமதிக்க முடியாது. இது குறித்து பாராளுமன்றத்திலும் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்.

அன்று புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளித்து, புத்த சாசன அமைச்சு ஒன்றை நிறுவி மற்ற மதங்களுக்கு இராஜாங்க அமைச்சு ஒன்றை உருவாக்கினாலும், இப்போது அது இல்லாதிருப்பதும் ஒரு பிரச்சினையாகும். பிக்குகளை அவமதிக்கும் செயல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் புத்த சாசன அமைச்சின் கீழ் தூரத்தில் உள்ள தேரர்களுக்காக தனியே தர்ம சாலைகள் அமைக்கப்பட்டன. இப்போது அது எதுவும் நடைபெறவில்லை. இது வருத்தமான விடயமாகும் என்றார்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.