சர்வதேச தரங்களுக்கமைய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை மாற்றி நீதித்துறையைப் பலப்படுத்துங்கள் – அருண் சித்தார்த்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதை விடுத்து ஏலவே இருக்கின்ற சட்டங்களை வலுப்படுத்தி பக்கச்சார்பின்றி பொலிஸ் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று (25/11/2025) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரவிக்கையில்,

குற்றக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சந்தேகநபர்களைத் நீண்ட நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க இந்த அரசாங்கமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையே பாவிக்கின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பொலிஸ் காவலில் உள்ள நபரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு சட்டவலுவுள்ள ஆதாரமாக நீதிமன்றுகள் ஏற்கமுடியும் என பயங்கரவாத தடுப்பு சட்ட ஏற்பாடுகள் கூறுகின்றன.

அவ்வாறாயின் பொலிஸார் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்தி பெறும் வாக்குமூலம் அவருக்கு எதிரான வலுவான சாட்சியாக மாறுவதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அச்சட்டம் நியாயமான வலுவான சர்வதேச தரங்களுக்கமைவான சட்டமாக மாற்றப்பட வேண்டும். அதே நேரம் குற்றுக்குழுக்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களையோ அல்லது பாரிய குற்றங்களுடன் தொடர்புடயவர்களையோ நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலங்களை இயற்றுவதை விடுத்து இருக்கின்ற சட்டங்களைத் திருத்தி இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

காரணம் ஆங்கிலத்தில் The more corrupt the state, the more numerous the laws என்பார்கள். அதிக சட்டங்களை உருவாக்குவது ஊழல் மோசடிகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு செயல்பாடாகவே சர்வதேச ரீதியில் கருதப்படுகிறது.

அதாவது சட்டங்கள் அதிகமாக இருந்தால், தவறான பயன்படுத்துதலுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதிகாரிகள் அவற்றைத் தங்கள்படி விளக்கவும் அல்லது தேர்ந்தெடுத்து நடைமுறைபடுத்தவும் அதிக அதிகாரம் பெறுகின்றனர்.

ஒரு ஆரோக்கியமான அரசியல் சட்டங்கள் தெளிவாகவும், குறைவாகவும், நியாயமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அதேவேளை கனடாவின் பிறம்ரன் நகரின் மேயர் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட குழுவினர் கொடியை ஏற்றியதன் மூலம் கனடிய criminal code எனப்படும் கனடிய சட்டத்தை மீறியுள்ளார்.

ஆகவே கனடிய (federal government) கூட்டாட்சி அரசு பற்றிக பிரவுன் அவர்களைக் கைது செய்து கனடிய சட்டதிட்டங்களின்படி தண்டிக்க வேண்டும் என அவர் கனடா அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு அவரைத் கைது செய்து தண்டிப்பதன் மூலம் கனடா தனது சொந்த சட்டதிட்டங்களை பக்கச்சார்பின்றி மதிக்கும் ஒரு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

thyity1

(no-name)

April 30, 2026

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள

iran

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்: புதிய யாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து அறிவிப்பு

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்

maalai-malar_2026-04-29_qx0ocmbn_sreesaisilks0

சமூக வலைதளப் பிரபலம் நாகலட்சுமி கொ*லையில் அதிர வைக்கும் தகவல்கள்: கணவரின் ஈகோ விபரீதமான பின்னணி!

April 30, 2026

சென்னை: நங்கநல்லூரில் ‘Ready to Wear’ சேலை பிசினஸ் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருந்த தொழில் அதிபர்

collage-down-1777513973

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தலா

dailythanthi_2026-04-30_lol3o75a_kozadi33

கீழடி 11-ம் கட்ட அகழாய்வு: வரிசையாகக் கண்டெடுக்கப்படும் சாயக் கிண்ணங்கள் – வியப்பில் தொல்லியல் ஆய்வாளர்கள்!

April 30, 2026

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல்

ka_sengottaiyan

“கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் தீர்ப்பு வேறு” – 200 இடங்களில் தவெக வெல்லும் என செங்கோட்டையன் உறுதி!

April 30, 2026

சென்னை: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட கருத்து; மக்கள் தீர்ப்பு என்பது முற்றிலும் வேறானது” என்று

collage-down-1748402151

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்காக 100 இலவசப் பேருந்துகள் இயக்கம்!

April 30, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில்

684512279_1543096277856332_8658114898696776537_n copy

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று அவசர ஆலோசனை!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thirumavalavan-vck-2025-06-678bbbedc1311a5ad231b1963628d359

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

April 30, 2026

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத்

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே, 2.5 மில்லியன்

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்