சர்வதேச தரங்களுக்கமைய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை மாற்றி நீதித்துறையைப் பலப்படுத்துங்கள் – அருண் சித்தார்த்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதை விடுத்து ஏலவே இருக்கின்ற சட்டங்களை வலுப்படுத்தி பக்கச்சார்பின்றி பொலிஸ் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று (25/11/2025) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரவிக்கையில்,

குற்றக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சந்தேகநபர்களைத் நீண்ட நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க இந்த அரசாங்கமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையே பாவிக்கின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பொலிஸ் காவலில் உள்ள நபரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு சட்டவலுவுள்ள ஆதாரமாக நீதிமன்றுகள் ஏற்கமுடியும் என பயங்கரவாத தடுப்பு சட்ட ஏற்பாடுகள் கூறுகின்றன.

அவ்வாறாயின் பொலிஸார் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்தி பெறும் வாக்குமூலம் அவருக்கு எதிரான வலுவான சாட்சியாக மாறுவதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அச்சட்டம் நியாயமான வலுவான சர்வதேச தரங்களுக்கமைவான சட்டமாக மாற்றப்பட வேண்டும். அதே நேரம் குற்றுக்குழுக்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களையோ அல்லது பாரிய குற்றங்களுடன் தொடர்புடயவர்களையோ நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலங்களை இயற்றுவதை விடுத்து இருக்கின்ற சட்டங்களைத் திருத்தி இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

காரணம் ஆங்கிலத்தில் The more corrupt the state, the more numerous the laws என்பார்கள். அதிக சட்டங்களை உருவாக்குவது ஊழல் மோசடிகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு செயல்பாடாகவே சர்வதேச ரீதியில் கருதப்படுகிறது.

அதாவது சட்டங்கள் அதிகமாக இருந்தால், தவறான பயன்படுத்துதலுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதிகாரிகள் அவற்றைத் தங்கள்படி விளக்கவும் அல்லது தேர்ந்தெடுத்து நடைமுறைபடுத்தவும் அதிக அதிகாரம் பெறுகின்றனர்.

ஒரு ஆரோக்கியமான அரசியல் சட்டங்கள் தெளிவாகவும், குறைவாகவும், நியாயமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அதேவேளை கனடாவின் பிறம்ரன் நகரின் மேயர் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட குழுவினர் கொடியை ஏற்றியதன் மூலம் கனடிய criminal code எனப்படும் கனடிய சட்டத்தை மீறியுள்ளார்.

ஆகவே கனடிய (federal government) கூட்டாட்சி அரசு பற்றிக பிரவுன் அவர்களைக் கைது செய்து கனடிய சட்டதிட்டங்களின்படி தண்டிக்க வேண்டும் என அவர் கனடா அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு அவரைத் கைது செய்து தண்டிப்பதன் மூலம் கனடா தனது சொந்த சட்டதிட்டங்களை பக்கச்சார்பின்றி மதிக்கும் ஒரு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

729115779_1015905364372317_7450818906267864328_n

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகள் -பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன்

June 24, 2026

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட

vikatan_2026-05-22_za0m24b3_ramesh

குன்னூர் ரூ.15 கோடி கார் பார்க்கிங் பணி ரத்து – அறநிலையத்துறை அதிரடி!

June 24, 2026

சென்னை: குன்னூர் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிதியிலிருந்து சுமார் ரூ. 15 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும்

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை வழக்கு: பிரதான சந்தேக நபருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஓட்டுநர் கைது

June 24, 2026

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு உதவினார் மற்றும்

Screenshot_20260624_132345_Editor-Lite

இலங்கையின் கனிம வளங்களால் பயன்பெறுவது யார்? நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

June 24, 2026

அரசாங்கத்தின் தேசிய கனிமக் கொள்கை (National Mineral Policy) மற்றும் கனிம அகழ்வாராய்ச்சி, சுரங்க அகழ்வுக்கான உரிமங்கள் (Licences) வழங்கப்படுவது

suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்