மாநகர சபையின் பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு திருமலையில் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகர சபை அண்மைக்காலத்தில் மேற்கொண்ட பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,இளைஞர்கள் குழு ஒன்றினால் சபைக்கு முன்பாக திங்கட்கிழமை (24) அன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த சுமார் 50 இளைஞர்கள்,மாநகர சபை வாசலில் தமது கண்களை கருப்பு துணியால் கட்டியபடி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையோரின் கல்வி,வேலை வாய்ப்பு, திறன் விருத்தி சார்ந்து பல்வேறு சமூக செயற்பாடுகளை “தளம்” நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது மாநகர சபைக்கு உரித்தான கட்டிடத்தொகுதியில் இயங்கி வருகிறது.

இக்கட்டிடம் தொடர்பில் சபையானது முறையற்ற,சட்ட முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளையோரின் தொழில் முயற்சிகளை தடை செய்யும் ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

ஏன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் என செய்தியாளர்கள் வினவிய போது அதற்கு பதிலளித்த இளைஞர்கள்

“மாநகரசபைக்குரித்தான இக்கட்டிடம் தொடர்பில் சபையினால் தற்போது திறந்த கேள்வி குத்தகை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.அந்த விண்ணப்ப படிவங்களை பெற தளம் நிறுவனத்திற்கு சபையின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.அத்துடன் குத்தகை கேள்வி கோரப்பட்ட கட்டிட தொகுதிகளுக்கு முறையற்ற விதத்தில் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நகரின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் உரிமைசார் நம்பிக்கைகளை மீறி,கவனயீனமாக நிர்வாகம் செயல்படுகின்றது.

நகர வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்து செல்கின்றன.இவற்றை சபை கட்டுப்படுத்த தவறியுள்ளது. திருகோணமலை பேருந்து நிலையம் போன்ற பொதுச் சொத்துக்களை பேணும் நடவடிக்கைகளில் சபை கவனமின்றி செயல்படுகின்றது”என்று கூறினர்

மாநகர சபைக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அமைதியான முறையில் இளைஞர்கள் சபை அலுவலகத்திற்கு சென்று மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர்.இருந்த போதிலும் அங்கிருந்த காவலாளி மாநகர சபை ஆணையாளர் அலுவலகத்தில் இல்லை என பொய் கூறியமையால் அவருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது சற்று பதற்றமான நிலை அங்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆணையாளர் இளைஞர்களின் பிரதிநிதிகள் மூவரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உப முதல்வர் மற்றும் சபையின் இரண்டு உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில், இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆணையாளர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் தமது போராட்டத்தை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறினர்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் 26 ந் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் தாம் விசேட கவனம் செலுத்தி உரையாற்ற உள்ளதாக சபை உறுப்பினர் ஜெயசீலன் நாகரஜுன் இளைஞர்களுக்கு உறுதியளித்தார்.

TFFLHSNFUIL4BRUBNYZNXBWGVI

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: இரண்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் பிராங்க் ஸ்ட்ரோனாக் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 19, 2026

பல தசாப்தங்களுக்கு முன்னர் பல பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பில்லியனர் தொழிலதிபரான பிராங்க் ஸ்ட்ரோனாக்

chemma7

காணாமல் போனோர் அலுவலகம் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும்- ஆணையாளர்

June 19, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி

canada world cup

இஸ்மாயில் கோனேயின் கொடூரமான காயத்திற்குப் பின் சோகத்தில் மூழ்கிய கனடா அணி: ‘அவருக்காக இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்போம்’

June 19, 2026

கால்பந்தாட்டத்தில் நடுகளக் கூட்டணியில் (Midfield tandem) உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவது அவசியமாகும். அதற்கமைய, இஸ்மாயில்

carney33333333333

கத்தாருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 வெற்றிக்குப் பின், வீரர்களின் அறையில் கனடா பிரதமர் கார்னி ஆற்றிய உரை

June 19, 2026

026 ஜூன் 19 கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு,

JMDVZSNVIBCJHLCBSR264K4TN4

டொராண்டோவில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என காவல்துறை அறிவிப்பு

June 19, 2026

டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான

727288134_1590612522484861_5840860557900271912_n

மிசிசாகா நகரில் வயதான பெற்றோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: மகனைத் தேடும் காவல்துறை

June 19, 2026

வியாழக்கிழமை மாலை மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள வீடொன்றிற்குள் வயதான பெற்றோர் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்