7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (23) மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘குடு ரொஷான்’ என்பவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வந்த வேளையில் அவர் புகைப்பிடிப்பதற்காக வெளியில் சென்றிருந்தார்.

இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ‘குடு ரொஷான்’ அணிந்திருந்த உடைக்கு நிகரான ஆடையை அணிந்திருந்த மற்றொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அவர்கள் இருவரையும் அடையாளம் காண முடியாததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை, வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த ‘வனாத்தே சுமேதா’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரரின் மூன்று வயது மகளின் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் அவர் ‘குடு ரொஷான்’ என்பவருடன் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரி, விழாவிற்கு வந்தவர் போல் நடனமாடிக்கொண்டே சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி வந்த மோட்டார் வாகனம் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவே (23) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ‘மட்டக்குளி மனோஜ்’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிசூடு நடத்தியவர்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க மற்றும் களனி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் வழிகாட்டலில் 5 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை, தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் நேற்று மாலை 6.35 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அங்கு அவர்கள் இலக்கு வைத்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஓடும்போதும், அவரைத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபர் பொரளை, வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழாங்கியவர் இவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், தற்போது பொலிஸ் காவலில் உள்ள ‘வனாத்தே துமிந்த’ என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா ஆவார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘வனாத்தே சது’ என்ற குற்றவாளியின் தரப்பினால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தேவேந்திரமுனை தேவாலயத்தின் பெரஹரா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.

அதன் பாதுகாப்பிற்காக 600 பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

boavdfx

36 நாட்கள் மேலாகக் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்!

July 26, 2026

36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox’s Bazar),

danu

வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புள்ளவர்கள் தனுஷ்கோடியில் கைதானவர்கள்?

July 26, 2026

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை

pre

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகையில்? – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

July 26, 2026

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைகளில்

Death-2

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

July 26, 2026

பெல்லன்வில பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு

download

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை

July 26, 2026

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப்

PAORB2GRUNFXLLFYFI5ON7ESCE

கல்கரியில் காணாமல் போன 11 வயது சிறுவனைத் தேடும் பணி ‘நோஸ் ஹில் பூங்கா’ பகுதிக்கு விரிவாக்கம்

July 25, 2026

காணாமல் போன 11 வயதான பார்க்கர் வெல்ஸ் (Parker Wells) என்ற சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்

HVAI6OYZWRG25PUTY7WGYICNKQ

எட்டோபிகோக் துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்; சந்தேகநபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

July 25, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்

MediaFile_20260725_142217_197

பொதுவான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை-  ஆறு தமிழ் பேசும் கட்சிகள் அனுமதி கோரிக்கை!

July 25, 2026

தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட இம்மாதத் தொடக்கத்தில் தீர்மானித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின்

arrest1

கிளிநொச்சியில் வனஜீவராசிகள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல்: ஒன்பது பேர் கைது!

July 25, 2026

கிளிநொச்சி, அக்கரயான்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு

6

தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சென்னையில் கொண்டாட்டம்!

July 25, 2026

சென்னை: மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை

photo-collage.png (1)

முக்கிய மைல்கல்லை எட்டியது தமிழ்ச்சமூக மையம்

July 25, 2026

ரொறன்டோ ஒன்டாறியோ – வட கிழக்கு ஸ்காபரோவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட

4

“இனி அரசியல் பேச மாட்டேன் .. தலையிட மாட்டேன்” – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

July 25, 2026

திண்டிவனம்: 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை