திண்டுக்கல்:
“தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறிய கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், மே 4-ம் தேதி தமிழகத்தில் ‘விசில் புரட்சி’ நடைபெற்று தவெக அரியணையில் அமரும் என்று கூறியிருந்தார்.
இதற்குச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “விசில் சத்தம் வேறு, குண்டு சத்தம் வேறு என்பதைத் தம்பி விஜய் உணர வேண்டும். மே 4-ம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும். தற்போது தேர்தல் முடிவுகளுக்குப் பயந்து ஆன்மீகத்தைத் தேடித் திருச்செந்தூர் செல்லும் விஜய், முடிவுகள் வந்த பிறகு மீண்டும் ஷூட்டிங்கிற்கு இடம் தேடிச் செல்வாரோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று கிண்டலாகத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக மற்றும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#TamilisaiSoundararajan #Sengottaiyan #TVK #ThalapathyVijay #TNElection2026 #BJP #TamilPolitics #WhistleRevolution #May4 #ElectionResults #BreakingNews #VijayVsBJP #Dindigul #ChennaiPolitics #PoliticalWar #VijayTempleVisit #Vetrivel