292 ரூபாயிலிருந்து 354 ரூபாய் வரை: டொலர் நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கையாள்வதில் அரசாங்கம் கொண்டுள்ள அணுகுமுறை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளதுடன், பலவீனமடைந்து வரும் தேசிய நாணயத்தின் நேரடித் தாக்கம் இறுதியில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மூலம் பொதுமக்களையே பாதிக்கும் என எச்சரித்துள்ளது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ரூபாயின் “கட்டுப்பாடற்ற வீழ்ச்சி” காரணமாக நாடு தற்போது “மிகவும் பாரதூரமானதொரு பிரச்சினையை” […]
மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி; மலையகத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் மோதல் நிலைமைகள் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 114.75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளதுடன், ஈராக்கிற்கான ஏற்றுமதி 38 சதவீதத்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) ஏற்றுமதி 93 சதவீதத்தாலும் பாரிய சரிவைக் கண்டுள்ளதாக ‘ரொயிட்டர்ஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும், சுமார் 2.4 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் 1.5 பில்லியன் டொலர் […]
புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளதா?

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தேசிய தெரிவுக்குழு கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் புதிய தேசிய தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கமைய, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய தெரிவுக்குழு மாற்றப்படவுள்ளது. இவ்விடயம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், பதவியிலிருந்து விலகும் தற்போதைய தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் நீக்கம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இம்மாற்றத்தை தெரிவுக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் ‘நியூஸ்வைர்’ […]
வெளிநாட்டு நாணயச் சந்தை முடங்கும் அபாயம்; சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் (Forex market) கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சந்தை மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளமையானது நாணய மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கங்களையும் அநிச்சயத்தன்மையையும் தோற்றுவித்து, ஒரு ‘நச்சு வலயத்தை’ (Vicious cycle) உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதைச் […]
முன்னாள் காதலியைப் படுகொலை செய்த ஒன்ராறியோ நபருக்கு 25 ஆண்டுகள் தகுதிகாண் காலமற்ற ஆயுள் தண்டனை!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது முன்னாள் காதலியான மரினா நாகோலியா (Marina Nagolia) என்பவரைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் டேனியல் மேடின் (Daniil Matin) என்ற 38 வயதுடைய நபருக்கு 25 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத (No chance of parole) ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி மார்செல்லா ஹென்ஷல் (Justice Marcella Henschel) தலைமையில் ஐந்து வாரங்களாக நடைபெற்ற இந்த மேல்நீதிமன்ற விசாரணையின் முடிவில், […]
அமெரிக்கத் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றச்சாட்டில் கனடியப் பிரஜை மீது வழக்குப்பதிவு

மெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த கனடியப் பிரஜை ஒருவர், அங்கு நடைபெற்ற தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதாய்வாளர் அலுவலகம் (U.S. Attorney’s Office) தெரிவித்துள்ளது. பாஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள மசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தின் சாகஸ் (Saugus) நகரில் வசித்து வந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். அவர் மீது வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்களித்தமை (Unlawful voting by […]
எட்டோபிகோக்கில் வாகன மோதலுக்கு இலக்கான பாதசாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

வியாழக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான பாதசாரி ஒருவர் ஆபத்தான நிலையில் (Critical injuries) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிப்லிங் அவென்யூவிற்கு (Kipling Avenue) அருகிலுள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Dundas Street West) மற்றும் ஆக்லாந்து வீதி (Aukland Road) சந்திப்பில் அமைந்துள்ள ஒரு தனியார் வாகனப் பாதையில் (Private driveway) அதிகாலை 3:15 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த 40 வயது மதிக்கத்தக்க நபரொருவர் சிகிச்சைக்காக உள்ளூர் […]
பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (21) வியாழக்கிழமை உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன. கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் […]
யாழ். பல்கலைக்கழக புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீ கோகுலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை காலமும் பீடாதிபதியாகக் கடமையாற்றிய திருமதி தெய்வி தபோதரனின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததை அடுத்து, புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடச்சபை இன்று வியாழக்கிழமை கூடியது. புதிய பீடாதிபதி தெரிவுக்காக இருவர் போட்டியிட்டனர். கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் 4 மேலதிக வாக்குகளால் முன்னிலை பெற்றுப் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று முதல் […]
காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி: செயற்பாட்டாளர்கள் தடுத்துவைப்பு!

காஸா நோக்கிப் பயணமான ‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ எனும் சர்வதேச மனிதாபிமான கப்பல் பேரணியில் பங்கேற்ற செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் தடுத்துவைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிர கரிசனை வெளியிட்டுள்ளது. அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையரான சமீரா மெஹ்புப்தீனை பாதுகாப்பாக மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இரண்டு தசாப்தகால முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் காஸாவில் வாழும் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு அவசியமான […]