இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தீபச்செல்வன் முறைப்பாடு

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களம் கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் தடுத்து வைத்துள்ளது. இது தொடர்பில் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் […]

“என் ரத்தமே எனக்கு விஷமானால்.. தொண்டர்களே என் மருந்து!” – மகனுக்கு எதிராக ராமதாஸ் எழுதிய உருக்கமான கடிதம்!

தைலாபுரம், 2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “அன்புமணியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும். எப்போது அன்புமணி […]

தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், சீரமைப்புச் செய்க – ரவிகரன் எம்.பி

தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையத்தின்கீழான பெரியஇத்திமடு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச்செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த விடயப் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார். வரவுபிலவு குளத்தின்கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளின் அழைப்பையேற்று 20.04.2026நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் […]

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை செயலாளர் லோரி சாவேஸ் டெரிமர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை செயலராக இருந்த லோரி சாவேஸ்-டெரிமர் பதவியிலிருந்து விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின்னர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறும் மூன்றாவது பெண் அதிகாரி இவராவார். அவர் தனியார் துறையில் ஒரு பொறுப்பை ஏற்கப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்காலிகச் செயலராக கீத் சாண்டர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அவர் தனது அலுவலகத்தில் மது அருந்தியதாகவும், ஒரு கீழ்நிலை அதிகாரியுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாகவும் எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் […]

‘சமாதான நடைபயணம்’; ஜனாதிபதி முழு ஆதரவு

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணத்திற்கு’ ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் […]

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் அமுல்!

அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து நெடுநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த விடுத்துள்ள விசேட அறிவிப்பில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார். “மாலைத்தீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் […]

இந்தியக் கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகை

இந்தியக் கடற்படைக் கப்பலான (INS) ‘நிரீக்ஷக்’ (Nireekshak), ‘செயற்பாட்டுத் திருப்புமுனை’ (OTR) மற்றும் பயிற்சி விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (21) இலங்கை வந்தடைந்தது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமையச் சிறப்பான முறையில் வரவேற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Commander Sailesh Kumar Tyagi) தலைமையிலான இந்த சுழியோடி ஆதரவுக் கப்பல் (Diving Support Vessel), இலங்கை கடற்படையின் சுழியோடிகளுடன் (Diving Personnel) இணைந்து விசேட […]

எட்மண்டன் பச்சை குத்தும் கலைஞர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு-:பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

எட்மண்டனைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் (Tattoo Artist) ஒருவர் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இவரால் பாதிக்கப்பட்ட வேறு எவராவது இருக்கிறார்களா என எட்மண்டன் பொலிஸார் (EPS) விசாரணை நடத்தி வருகின்றனர். 40 வயதுடைய இஸ்கோடேவ் கிளாடு (Iskotew Gladu) என்பவர் மீது 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பதிவான பல புகார்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பெண் வாடிக்கையாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை […]

ஹாமில்டன் அதிரடி சோதனை: போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் நாய்க்குட்டிகள் மீட்பு

ஹாமில்டனில் உள்ள மருந்து விற்பனை நிலையம் (Dispensary) ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோத நாய் இனப்பெருக்க மையமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாமில்டனின் ‘கிங் ஸ்ட்ரீட் ஈஸ்ட்’ (421 King St. East) பகுதியில் அமைந்துள்ள ‘4 வின்ட்ஸ் மெடிசின் லாட்ஜ்’ (4 Winds Medicine Lodge) என்ற வணிக நிறுவனம், கஞ்சா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாக […]

வாகனத்தின் பின் இருக்கையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழப்பு: டொராண்டோ பொலிஸ்

டொராண்டோவில் திங்கட்கிழமை அன்று வாகனத்தின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். டொராண்டோவின் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் பேப் அவென்யூ (Pape Avenue) பகுதியில் உள்ள வாகனமொன்றின் பின் இருக்கையில் குழந்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு […]