மின் கட்டணம் இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாறும்

மின்சாரக் கட்டணங்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருத்தியமைக்கும் புதிய மின்சாரக் கட்டணச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு தயாராகி வருகிறது. தற்போதைய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை கட்டணங்கள் மாற்றமடைகின்றன. ஆனால், இந்த புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டால், கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாறும். இதனால் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் ஆகிய இரு தரப்பினரும் நன்மையடைவார்கள் என்று எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) இதழுக்குத் […]
இந்தியத் துணைத் தலைவர் இலங்கை வருகை: உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். நாளை (20) வரை அவர் இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார். வருகை விபரங்கள்: நேரம்: இன்று காலை 9:30 மணியளவில் 49 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தார். வரவேற்பு: விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட இலங்கை அமைச்சர்கள் குழுவினர் விமான நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறையில் (VIP lounge) […]
உழவியந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த நபர் தனது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 29 […]
உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 19.04.2026இன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் […]
மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையாக இருக்கலாம், அல்லது “ஜார்ஜ் குளூனி” போன்ற அவரது வசீகரமான ஆளுமையாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும், பிரதமர் மார்க் கார்னி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார். இம்முறை டைம் (Time) சஞ்சிகையின் 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) […]
ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! – தமிழரசுக் கட்சி கடும் சீற்றம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று தெரிவித்து அது தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு “புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணைக்கப்பாடு” என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்தக் கடிதத்தின் முழு […]
ஈரான் எங்களை மிரட்ட அனுமதிக்க மாட்டோம் – டொனால்ட் ட்ரம்ப்
நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திடும் நிகழ்வின் போது, ஈரானுடனான தற்போதைய பதற்றம் குறித்து அதிபர் ட்ரம்ப் சுருக்கமாகக் கருத்துத் தெரிவித்தார். ஈரானின் அணுகுமுறை: ஈரானுடன் “மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 47 ஆண்டுகளாக அந்த நாடு செய்வது போலவே இப்போதும் “சாதுர்யமாக” (Acting cute) நடந்துகொள்வதாகத் தெரிவித்தார். மிரட்டலுக்கு இடமில்லை: ஈரானியத் தலைவர்கள் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மூட விரும்புவதாகவும், ஆனால் அமெரிக்காவை “மிரட்டிப் பணிய வைக்க” (Blackmail) […]
வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழல்; உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை!

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக இலங்கை இணைந்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் கடந்த 16-ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது. ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த ஆவணத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் கையளித்தார். இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம், தொழிலாளர் சமூகத்தின் கௌரவம், சமத்துவம் மற்றும் மதிப்பினைப் […]
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்று உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சியாளர்களாக வத்திக்கான் அங்கீகரித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கத்தோலிக்கர்களும் தமது குடும்பங்களில் விசேட வழிபாடுகளை நடத்தி, உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், உண்மையும் நீதியும் விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டியும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உயிர்த்த […]
அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம்

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சித்ரா பௌர்ணமியைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.