2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்பதுடன், எதிர்காலத்தில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைவான சபைகளின் தலைவர்களுக்கு அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவின் கையொப்பத்தில் அனுப்பி வைத்துள்ள சுற்றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.

01. 2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, அனல் (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவ்வாறான அடிப்படையில் பணியாற்றி சுற்றறிக்கை விதிகளின்படி நிரந்தர நியமனம் பெற்று, ஆனால் அந்த நியமனங்கள் முறைப்படுத்தப்படாத ஊழியர்கள் தொடர்பில் இந்தச் சுற்றறிக்கையின் விதிகளுக்கமைய செயற்படுவதற்கு 2026.04.27 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

02. அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் 25/2014 மற்றும் 25/2014(I) ஆகியவற்றை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்த 2019.09.18 திகதியிட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 29/2019 இன் படி, 2019.09.01 ஆம் திகதியன்று பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள, தற்போது சேவையில் உள்ள ஊழியர்களுக்கு அன்றைய திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்:

I. 2019.09.01 ஆம் திகதிக்கு 180 நாட்கள் திருப்திகரமான மற்றும் தொடர்ச்சியான சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் (முறைப்படியான விடுமுறை மற்றும் அரச விடுமுறை நாட்களால் சேவை முறிவு ஏற்படாது).

II. குறித்த பதவிக்குரிய தகைமைகளைச் சுற்றறிக்கையின்படி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

III. அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 இல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை வகைகளைச் சார்ந்தவராக இருப்பதோடு, தகைமை பூர்த்தி செய்யும் அதே பதவி அல்லது அதே நிறுவனத்தின் அதே சம்பள அளவீட்டுக்குள் தற்போது வரை தொடர்ச்சியாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

IV. நிரந்தர நியமனங்கள் 2019.09.01 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் திகதியில் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தரப் பணியாளர் குழாமில் வெற்றிடங்கள் இருந்தால் மட்டுமே அந்த வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு நியமனம் வழங்கப்பட வேண்டும். வெற்றிடங்கள் இல்லையெனில், அந்தப் பதவி வகிப்பவருக்கு “தனிப்பட்ட ரீதியிலான” (Personal to holder) நிரந்தரப் பதவியாகப் பேணப்பட வேண்டும்.

V. தனிப்பட்ட ரீதியிலான நியமனம் வழங்கப்பட்டிருக்கும் போது, முறையான பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்படும் போது புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்யாது, இவர்களை அந்த வெற்றிடங்களுக்கு முகாமைத்துவ சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் உள்வாங்க வேண்டும்.

VI. நிலுவைச் சம்பளம் வழங்கப்படமாட்டாது. அதிகாரிகள் நிரந்தர நியமனம் பெறும் திகதியிலிருந்து அவர்களின் சம்பளம் மற்றும் விடுமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

VII. கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பயிற்சி நெறிகளை ஒழுங்கு செய்து நிரந்தர நியமனம் வழங்க நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

03. இந்தச் சுற்றறிக்கையின் கீழ் நிரந்தர நியமனம் பெறும் ஊழியர்கள் தொடர்பான தகவல்களை இணைப்பு 01 மற்றும் 02 இல் உள்ள படிவங்களின்படி முகாமைத்துவ சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு நிறுவனத் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

04. இவர்களுக்குத் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்ய வசதிகள் வழங்கப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள் சேவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவரை சேவையில் உள்ளவர்கள் தகுதிகாண் காலத்தைப் பூர்த்தி செய்ததாகக் கருதப்படுவர். 2019.09.01 முதல் நிரந்தர நியமனம் வழங்கும் திகதி வரையிலான காலம் தகுதிகாண் காலமாக நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

05. மேலதிகமாக உள்ள ஊழியர்களை வேறு நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு இடமாற்றுவது குறித்து பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் அல்லது நிறுவனத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06. ஒருங்கிணைந்த சேவையைச் சேர்ந்த ஊழியர்களை இடமாற்ற அல்லது நியமனக் கடிதங்களை வழங்க ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

07. முந்தைய சுற்றறிக்கைகளின் கீழ் நிலுவையில் உள்ள பதவி அங்கீகாரக் கோரிக்கைகளை முகாமைத்துவ சேவைத் திணைக்களம் விரைவாக வழங்க வேண்டும்.

08. முந்தைய சுற்றறிக்கைகளுக்கு முரணாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவர்கள் தொடர்பான நடைமுறைகள்:

i. 45 வயதிற்கு மிகாத, ஆனால் வேறு திகதிகளில் நிரந்தர நியமனம் பெற்றவர்களின் நியமனங்கள் முறைப்படியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

ii. 45 வயதிற்கு மேல் இருந்து நிரந்தர நியமனம் பெற்றவர்களின் நியமனங்கள் அரசாங்க ஊழியர் சேமலாப நிதிய (PSPF) அடிப்படையிலான நியமனங்களாகக் கருதப்படும்.

09. அரசாங்கப் பணியில் ஈடுபட வேறு வழிகளில் தகுதியற்ற எவருக்கும் இந்தச் சுற்றறிக்கையின் கீழ் நிரந்தர நியமனம் வழங்கப்படக் கூடாது.

10. இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்களையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் கோப்பிற்கு வெளியிலோ தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் எவரையும் நியமிக்கக் கூடாது. மீறி நியமிக்கப்பட்டால் அதற்கு நியமன அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும்.

11. இந்தச் சுற்றறிக்கை மகா திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்படுகிறது.

an

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்

June 25, 2026

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய

ni

நைஜீரியாவில் நள்ளிரவில் பொதுமக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் பலி

June 25, 2026

நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20

up

மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை விரைவில் நிறைவு செய்ய பணிப்பு

June 25, 2026

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள்

Accident

நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் விபத்து ; 5 பேர் காயம்

June 25, 2026

அனுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தில்லையடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற முச்சக்கர வண்டி

madu matha

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்

June 25, 2026

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை

3E7VMYH3WZF3XLNWLHPJSZRLEE

ஒரிலியாவில் கடத்தல் மற்றும் கொலை முயற்சி: பிரஹார ரொறன்ரோவைச் சேர்ந்த 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடங்குகிறது!

June 25, 2026

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரிலியா நகரில் உள்ள கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் (Gas station) ஒன்றிற்குள் மிசிசாகாவைச்

Chandra

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

June 25, 2026

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம்

air canada1555

விமானிக்கு திடீர் மருத்துவ அவசரநிலை: போஸ்டன் நகருக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட ‘எயார் கனடா’ விமானம்

June 25, 2026

நியூ ஜெர்சியில் இருந்து ஹாலிஃபாக்ஸ் (Halifax) நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயார் கனடா விமானத்தின் விமானிக்கு (Pilot) திடீரென ஏற்பட்ட

ba

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

June 25, 2026

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக, நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பாரியதொரு கவனயீர்ப்பு

730211338_1737492697446614_7852674110750856440_n

, ஸ்டோனி கிரீக் தீ வைப்புச் சம்பவம்: சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஹாமில்டன் போலீஸ்அவசரக் கோரிக்கை

June 25, 2026

ஹாமில்டன் (Hamilton): கனடாவின் ஒன்ராறியோ மாநிலம், கீழ் ஸ்டோனி கிரீக் (Stoney Creek) பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில்

arr

ஐஸ் போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது

June 25, 2026

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒருவர் நேற்று புதன்கிழமை (24)

Harini-amarasooriya

நாட்டின் கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காணுமாறு பணிப்பு

June 25, 2026

கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய