பிபா (FIFA) உலகக்கிண்ணம்: ‘மோசமான சூழ்நிலைகளை’ எதிர்கொள்ள கனடா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

2026 பிபா உலகக்கிண்ணப் போட்டிகள் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் போன்ற நகரங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அவசரகால சேவைகளுக்கான அதிகரித்த தேவை ஆகியவற்றைச் சமாளிக்க விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளின் தயார்நிலை: ரொறன்ரோ டவுண்டவுனில் உள்ள செயின்ட் மைக்கேல் மருத்துவமனையின் அதிர்ச்சி மருத்துவப் பணிப்பாளர் (Trauma Medical Director) டாக்டர் ஆண்ட்ரூ பெக்கெட் கூறுகையில், “மோசமான சூழ்நிலைகளை” கையாள்வதற்காக மருத்துவமனைகள் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். […]

எச்சரிக்கை: வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடிய ஆபத்தான நபர் விடுதலையாகியுள்ளார் – ரொறன்ரோ பொலிஸார்

சிறைத்தண்டனை முடிந்து அண்மையில் விடுதலையாகியுள்ள, வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடிய “அதிக ஆபத்துள்ள” நபர் குறித்து ரொறன்ரோ பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திய தாக்குதல், அமைதி காக்கும் அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை ஆகிய குற்றங்களுக்காக நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் 22 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்த 49 வயதுடைய வில்லியம் சார்லஸ் கிப்சன் (William Charles Gibson) கடந்த வெள்ளிக்கிழமை விடுதலையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

நான் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கப் போவதில்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார். இன்று (02) மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னைய நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போது நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கு முப்படைகளும் […]

செம்மணியில் இன்றும் மூன்று என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுப்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் […]

வடக்கில் பல அரசியல்வாதிகள் கைதாவார்கள் — யாழில் பிமல் ஆருடம்

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் தனது […]

வேளாங்கண்ணி தேவாலயத்தில் தவெக தொண்டர்கள் முழக்கம்: திருப்பலி 30 நிமிடம் நிறுத்தம் – பரபரப்பு வீடியோ!

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் எழுப்பிய முழக்கத்தால் திருப்பலிப் பிரார்த்தனை சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய், திருச்செந்தூர் மற்றும் சீரடி சாய்பாபா கோவில்களுக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து, இன்று வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரக்கூடும் என்ற தகவல் பரவியது. இதனையொட்டி, இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். பேராலயத்தில் வழக்கமான திருப்பலி நடைபெற்றுக் […]

‘ஜனநாயகன்’ படம் லீக்: கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கை சிக்கல்களால் இன்னும் திரையரங்கிற்கு வராத ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் கைதான 9 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் சான்று கிடைக்காததால் தற்போது வரை மறு ஆய்வில் உள்ளது. இந்தச் சூழலில், படம் ஆன்லைனில் கசிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீநாத், […]

வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

சேலம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலத்தில் முகாமிட்டுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோரைச் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், […]

“ஜாதி, மத பேதமின்றி கோவில் திருவிழாக்களை நடத்த வேண்டும்” – மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு!

மதுரை: திருச்சி பீமாநகர் செடல் மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழாவிற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, கோவில் திருவிழாக்கள் தொடர்பாகப் பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இந்த மனுவை இன்று விசாரித்தது. அப்போது பேசிய நீதிபதி, “கோவில் திருவிழாக்களில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். யாருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்புச் சலுகைகள் வழங்கக் கூடாது” என்று உத்தரவிட்டார். மேலும், திருவிழாக் காலங்களில் உருவாகும் […]

“வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி 1 கி.மீ. தூரத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது” – தேர்தல் ஆணையத்தில் தவெக கோரிக்கை!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு நாளன்று துறைமுகம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாகவும், ஸ்ரீரங்கத்தில் கட்சி அலுவலகம் எரிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தோல்வி பயத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகச் […]