கிளிநொச்சி ஏ- 9 வீதியில் திடீர் வாகன சோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் குறித்த பரிசோதரன நடைபெற்றது. குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. வீதியால் செல்வதற்கு தரமற்ற வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பரந்தன் மற்றும் முருகண்டி வீதி போக்குவரத்தில் […]
தர்பூசணியால் மும்பை குடும்பம் மர்ம மரணம்?

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழம் சாப்பிட்டதே காரணம் என பரவி வந்த செய்திகள் பொய்யானவை என புதிய தடயவியல் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த தொலைபேசி உபகரண விற்பனையாளரான அப்துல்லா டோகாடியா (45), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்களான ஜைனப் (13), ஆயிஷா (16) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் உணவு அருந்திய பின்னர், அதிகாலை […]
ஈரானில் குண்டு வெடிப்பு: பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி!

ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரானின் ஷான்சஜ் நகரில், புரட்சிகர காவல்படை தளம் அருகே நேற்று இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் பலியாகியுள்ளனர். ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் பல்வேறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், சில வெடிகுண்டுகள் […]
வேளாங்கண்ணி வருகை ரத்து: மணிக்கணக்கில் காத்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!

நாகப்பட்டினம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மீகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று வேளாங்கண்ணி மற்றும் நாகூர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர், ராமேஸ்வரம் மற்றும் மதுரையில் வழிபாடு நடத்திய விஜய், இன்று புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு வருவார் எனத் தகவல்கள் பரவின. […]
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள்!

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பவுர்ணமி திதி, நேற்று இரவு 11.08 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல், 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர், மோர் மற்றும் அன்னதானம் […]
சென்னை, மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை; அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் நீதிபதிகள் நியமனம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தின் முதல் வாரத்தில், வரும் மே 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அவசர வழக்கு தொடர்பான மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இந்த […]
“மே 4 முதல் கத்தரி வெயில் ஆரம்பம்; ஆனால் கோடை மழைக்கு அதிக வாய்ப்பு” – வானிலை ஆய்வாளர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை காலத்தின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் காலம் வரும் மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு கத்தரி வெயில் வெப்பம் மற்றும் மழையின் கலவையாக இருக்கும் என தனியார் வானிலை […]
பாஸ்டேக்கில் பணமில்லை: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு – பயணிகள் தவிப்பு!

சிவகங்கை: மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில், பாஸ்டேக் (FASTag) கணக்கில் போதிய பணம் இல்லாததால் நேற்று காலை அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 1 முதல் அனைத்து வாகனங்களும் மின்னணு அட்டை மூலமாக மட்டுமே சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், ஊழியர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். மதுரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி நோக்கிச் சென்ற பேருந்துகள் சுமார் […]
“தவெக ஒரு முக்கிய சக்தி; தேர்தல் முடிவுகளில் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” – வைகோ பரபரப்பு பேட்டி!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், தவெக இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி வரும் நிலையில், வைகோவின் பேச்சு அதற்கு மாறாக அமைந்துள்ளது. ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் […]
“அறிவிக்கப்படாத லாக்டவுன் சூழல்” – சிலிண்டர் விலை உயர்வால் டீ, டிபன் கடைகள் கடும் பாதிப்பு!

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.3,000-ஐ கடந்து விற்பனையாவதால், உணவகங்கள் மற்றும் சிறு டீ கடைகளில் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்ப்பதுடன், ஒரு வகையான ‘அறிவிக்கப்படாத லாக்டவுன்’ சூழலை உருவாக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வேலூர் போன்ற மாவட்டங்களில் டீ […]