“மே 4 முதல் கத்தரி வெயில் ஆரம்பம்; ஆனால் கோடை மழைக்கு அதிக வாய்ப்பு” – வானிலை ஆய்வாளர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை காலத்தின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் காலம் வரும் மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு கத்தரி வெயில் வெப்பம் மற்றும் மழையின் கலவையாக இருக்கும் என தனியார் வானிலை […]

பாஸ்டேக்கில் பணமில்லை: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு – பயணிகள் தவிப்பு!

சிவகங்கை: மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில், பாஸ்டேக் (FASTag) கணக்கில் போதிய பணம் இல்லாததால் நேற்று காலை அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 1 முதல் அனைத்து வாகனங்களும் மின்னணு அட்டை மூலமாக மட்டுமே சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், ஊழியர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். மதுரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி நோக்கிச் சென்ற பேருந்துகள் சுமார் […]

“தவெக ஒரு முக்கிய சக்தி; தேர்தல் முடிவுகளில் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” – வைகோ பரபரப்பு பேட்டி!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், தவெக இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி வரும் நிலையில், வைகோவின் பேச்சு அதற்கு மாறாக அமைந்துள்ளது. ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் […]

“அறிவிக்கப்படாத லாக்டவுன் சூழல்” – சிலிண்டர் விலை உயர்வால் டீ, டிபன் கடைகள் கடும் பாதிப்பு!

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.3,000-ஐ கடந்து விற்பனையாவதால், உணவகங்கள் மற்றும் சிறு டீ கடைகளில் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்ப்பதுடன், ஒரு வகையான ‘அறிவிக்கப்படாத லாக்டவுன்’ சூழலை உருவாக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வேலூர் போன்ற மாவட்டங்களில் டீ […]

“சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” – விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பாடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1988-ல் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” என்ற பாடலை அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலின் முகப்புப் படத்தில் (Thumbnail), நடிகை ராதிகாவுடன் […]

“விஜய் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார்; மே 4-ல் திமுகவின் மோசமான ஆட்சிக்கு முடிவு வரும்” – நயினார் நாகேந்திரன் அதிரடி!

கன்னியாகுமரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் முடிவுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் குறித்துத் தனது அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ளவை கருத்துக்கணிப்புகள் அல்ல; அவை திமுக கூட்டணியால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட கருத்துத் திணிப்பு” என்று அவர் சாடினார். மேலும், தமிழக மக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கடும் அதிருப்தியில் […]

வடக்கில்பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கிடைத்துவந்த முறைப்பாடுகளையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட விசாரணைக் குழுவினர் வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 34 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் அதிரடி திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் […]

ராமநாதபுரம் அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு!

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் கிராமத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட இந்த கருங்கல் சிற்பம், தாமரை பீடத்தின் மேல் அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் தலைக்கு மேல் முக்குடை அமைப்பும், பின்புறம் ஒளிவட்டமும் (பிரபாவளி) அசோக மரத்தின் நிழலில் அவர் தியான நிலையில் இருப்பதும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் […]

கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா: மின்னல் தாக்கியதில் காவலர் உள்பட 11 பேர் காயம்!

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று (மே 1) விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய போது, மாலை 5 மணியளவில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பாதையின் ஒன்பதாவது வளைவில் திடீரென மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் கேரள காவல்துறையைச் சேர்ந்த காவலர் அன்சார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 11 […]

58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, சுமார் 58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19 முதல் நான்கு கட்டங்களாக வான்பரப்பு திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 25 முதல் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 இடங்களுக்கான சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. துருக்கி (இஸ்தான்புல்), சீனா, ரஷ்யா, ஓமான் (மஸ்கட்) மற்றும் சவுதி அரேபியா (மதீனா) உள்ளிட்ட நாடுகளுக்கு […]