58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, சுமார் 58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19 முதல் நான்கு கட்டங்களாக வான்பரப்பு திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 25 முதல் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 இடங்களுக்கான சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. துருக்கி (இஸ்தான்புல்), சீனா, ரஷ்யா, ஓமான் (மஸ்கட்) மற்றும் சவுதி அரேபியா (மதீனா) உள்ளிட்ட நாடுகளுக்கு […]

காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் பணிகள்-வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர்

எமது வடபுலத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்துக்கு இணையாகக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனைக்கமைய, காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் […]

தேயிலைத் தொழிற்சாலையில் பாரிய தீ

நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூக்சைட் பகுதியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் நேற்று (01) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: பழமைவாய்ந்த இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த ராகலை பொலிஸார், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் படையினர் இணைந்து தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், தீயினை அணைக்க முடியாமல் தொழிற்சாலைக் கட்டடம் மற்றும் இயந்திரங்கள் […]

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவு; டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அந்த இலக்கை அடைவார்களா என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவுத் திட்டமொன்றை அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி […]

லொறியின் பின்பகுதியில் சிக்குண்டு அதன் உதவியாளர் பலி

நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின்பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று நேற்று (01) காலை பொருட்களை இறக்குவதற்காக பிரதான சாலையிலிருந்து பின்னோக்கி (Reverse) நகர்த்தப்பட்டுள்ளது. அப்போது, லொறியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த களஞ்சியசாலைச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் […]

சபாத் இல்லம் குறித்து விசாரித்த 7 இளைஞர்கள் கைது

பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள், வியாழக்கிழமை (30) அன்று பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 28 வயது மதிக்கத்தக்கவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை அறுகம்பை பிரதேசத்திற்கு வருகை தந்த குறித்த இளைஞர்கள், அங்கு முன்னர் செயற்பட்டு வந்த ‘சபாத் இல்லம்’ தொடர்பாகத் தேடி விசாரித்துள்ளனர். இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொத்துவில் பொலிஸார் அவர்களைச் […]

இன்று இந்த கொடிய ஜே.வி.பி அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் அழித்து கல்வியைச் சீரழித்துள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற மே தினப் பேரணியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இரு கட்சிகளும் இணைந்து […]

ஈரானிய அதிகாரிக்கு விசா வழங்கப்பட்ட விவகாரம்: தான் பொறுப்பேற்பதாக லீனா தியாப் அறிவிப்பு

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் (IRGC) தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் ஈரானிய அதிகாரி ஒருவருக்கு கனடாவுக்கு விஜயம் செய்ய விசா வழங்கப்பட்டமைக்குத் தான் பொறுப்பேற்பதாக கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர்லீனா தியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத் தீர்மானத்தில் தனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் மெஹ்தி தாஜ் (Mehdi Taj) என்பவருடன் தொடர்புடையது. அவருக்குத் தற்காலிக வதிவிட விசா வழங்கப்பட்ட போதிலும், அவர் நாட்டிற்குள் நுழைவதற்கு […]

டேட்டிங் ஆப் மோசடி செய்பவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஒன்லைன் டேட்டிங் செயலிகள் (Online dating apps) மூலம் பலரை ஏமாற்றிய குற்றத்திற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற நபர் ஒருவரை பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாணிச் (Saanich) பொலிஸ் திணைக்களத்தின் தகவல்படி, புரோடி ப்ரூக்ஸ் (Brodie Brooks) என்ற அந்த நபர், “அமைதியைப் பேணவும் நன்னடத்தையுடன் இருக்கவும்” என்ற நீதிமன்றக் கட்டளை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகத் தற்போது தேடப்பட்டு வருகிறார். விக்டோரியா பிராந்தியத்தைச் சுற்றி வசிக்கும் சுமார் 12-க்கும் மேற்பட்டவர்களிடம் […]

பிக்கரிங் (Pickering) கடைத்தொகுதி பாலியல் அத்துமீறல்: பொதுமக்களின் உதவியுடன் சந்தேக நபர் கைது

பிக்கரிங் நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் அநாகரீகமான செயல்கள் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், பொதுமக்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவையின் (Durham Regional Police Service) தகவல்படி, இந்தச் சம்பவங்கள் ‘த ஷொப்ஸ் அட் பிக்கரிங் சிட்டி சென்டர்’ (The Shops at Pickering City Centre) கடைத்தொகுதிக்குள் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நிகழ்ந்துள்ளன. கடந்த மார்ச் […]