தமிழ் மக்கள் பேரவையின் மே தின நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து இளங்கலைஞர் மண்டபம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு ஆரம்பமானது.
இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்,
சிங்கள பெளத்த சிறுபான்மை இடங்களில் அடக்கி ஒடுக்கி நாங்கள் ஒரு பொது அடையாளமாக வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வேறுபாடுகளை நீக்கி ஒரு அரசியல் கலாசாரத்தை முன் கொண்டு சென்று விட்டது ஆனால் சிங்கள தேசம் அந்த பாதையை நிராகரித்தது.
சிங்களதேசம் தனது அடையாளத்தை மட்டும் பாதுகாத்து ஏனையவற்றை அழித்தது அது தான் 77 வருசமாக தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.
தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலமை காணப்படுகிறது. சிலர் இதற்கு துணைபோகின்றனர். இதுதான் எமது தேசத்தையே இல்லாமல் செய்வதற்கு காரணமாகிறது.
இங்கு நடப்பது இனப்படுகொலை, தந்தை செல்வநாயகம் தலைமைதாங்கி வலியுறுத்திய விடயம் தான் முக்கியமானது அவர் தெளிவாக சொன்னார் எமது இனப்பிரச்சனைக்கு மூல காரணம் ஒற்றையாட்சி முறை அது இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது.
அவரைப்பற்றிய பேசிய ஜி.எல்.பீரிஸ் கூட அதனை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தான் பக்குவமான நிதானமான தலைவர், தந்தை செல்வாவின் தமிழீழ கோரிக்கையை நிராகரிப்பதாக பேசியுள்ளார். அவரை நிகழ்விற்கு கூப்பிட்டார்கள் தந்தை செல்வாவின் கொள்கைகளை மறுத்து ஒற்றையாட்சிக்கு துணைபோகும் வகையாகவே செயற்படுகின்றனர்.
தந்தை செல்வாவின் உரை தொடர்பான அழைத்தவர்கள் கூட அவர் பேசிய விடயம் தவறானது என்ற ஒரு கருத்தைக்கூட கூறவில்லை என தெரிவித்தார்.
நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி ஜோதிலிங்கம், க.அருந்தவபாலன், பொ.ஐங்கரநேசன், நாவலன், மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.