மே 18க்கு முன்னதாக தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு

கம்பர்லாந்து மாநகர சபையின் (Cumberland City Council) ஆதரவுடன் சிவிக் பூங்காவில் (Civic Park) தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

மே 16, 2026 அன்று வெளியிடப்பட்டது

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மாட் (Hugh McDermott), தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்திற்கு முன்னதாக, மே 14 அன்று நியூ சவுத் வேல்ஸ் (NSW) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மெக்டெர்மாட், முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களைக் கண்டித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, 300,000 க்கும் அதிகமான தமிழர்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட “பாதுகாப்பு வலயங்களுக்குள்” (Safe zones) நுழைந்ததாக அவர் குறிப்பிட்டார். “தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட இடங்களை நோக்கி, மக்கள் தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினர்,” என்று கூறிய அவர், பின்னர் அந்தப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் சிக்கியிருந்த பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் தரை, கடல் மற்றும் வான்வழியாக “முறையான, இலக்கு வைக்கப்பட்ட கனரக பீரங்கித் தாக்குதல்கள், கார்பெட் குண்டுவீச்சுகள் (Carpet bombing) மற்றும் இயந்திரத் துப்பாக்கிச் சூடுகளை” நடத்தியதாகச் சுட்டிக்காட்டினார்.

“இது ஒரு இனப்படுகொலை. இது அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும், இதற்குப் பொறுப்பான இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தில் உள்ள குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மெக்டெர்மாட், தமிழ் மக்களை அழிப்பதற்கான முயற்சி “வன்முறையுடன் தொடங்கவில்லை”, மாறாக “அரசாங்கக் கொள்கை” மூலமே தொடங்கியது என்று கூறினார். சுதந்திரத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரபட்சமான கொள்கைகளை அவர் இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டினார்.

1956 ஆம் ஆண்டின் ‘தனிச் சிங்களச் சட்டம்’, 1981 இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமை, 1983 இன் ‘கறுப்பு ஜூலை’ தமிழ் எதிர்ப்பு வன்முறைகள் மற்றும் பல தசாப்தங்களாகத் தொடரும் கட்டாயக் கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்கள் ஆகியவற்றை தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு முறையான அடக்குமுறைப் பிரசாரத்தின் ஒரு பகுதி என அவர் விவரித்தார்.

பெண்டில் ஹில் (Pendle Hill) பகுதியில் உள்ள சிவிக் பூங்காவில் (Civic Park), கம்பர்லாந்து மாநகர சபையின் ஆதரவுடனும், உள்ளூர் தமிழ் சமூகத்தின் நிதியுதவியுடனும் கட்டப்பட்டுள்ள ‘தமிழ் சமூக இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின்’ அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினருடன் தானும் கலந்துகொள்ளவுள்ளதாக அந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் அறிவித்தார்.

இந்த நினைவுச் சின்னத்தை “அமைதி, நீதி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான நமது சமூகத்தின் நீடித்த குரலின் நிரந்தர வெளிப்பாடு” என்று விவரித்த மெக்டெர்மாட், ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் புலம்பெயர் மக்களின் (Tamil diaspora) மீளெழுச்சித் திறனைப் பாராட்டியதுடன், தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளையும் அங்கீகரித்தார்.

“நான் நமது தமிழ் சமூகத்துடன் நிற்கிறேன்,” என்று அவர் கூறினார். “தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் அனைவருக்கும் நான் எனது நினைவேந்தலைச் செலுத்துவதுடன், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் நீதியையும் கோருகிறேன்.”

உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலின் 17ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கத் தயாராகி வரும் வேளையில் இந்த உரை வெளியாகியுள்ளது

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்