முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைலமயில் விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ பயன்பாட்டில் உள்ள காணிகளை சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகள், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகாம்பிகை குள காணி மற்றும் இயக்கச்சியிலுள்ள காணிகளை விடுவித்தல் அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்ததுடன், வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக அப் பகுதியில் கன்னிவெடி அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
கேப்பாப்புலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மிகுதி காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் குழு அமைக்கப்பட்டு கள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்படும் அசாதாரன மற்றும் இடர் நிலைமைகளின்போது பொலிசாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுவதாகவும், போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இவ் ஆண்டு யூன் மாதம் வரையில் 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன், தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், கிளிேநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், வன்னிப் பிராந்திய கட்டளை தளபதிகள், கிழக்கு கடற்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ர உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
7

திமுக ஆட்சியில் அறிமுகமான ‘தாயுமானவர் திட்டம்’ பெயர் மாற்றம்: தவெக அரசின் அடுத்த அதிரடி!

July 31, 2026

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை ஆளும் தவெக அரசு மாற்றி வருவதாக

761829116_1313251384218240_3221568292478679397_n

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைலமயில் விசேட கலந்துரையாடல்!

July 31, 2026

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ பயன்பாட்டில் உள்ள காணிகளை சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான

761384378_1805269614184754_3155880573089000349_n

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்-பாதுகாப்பு பிரதியமைச்சர்

July 31, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு

default (43)

கிட்டத்தட்ட 2 வாரத் தேடுதலின் முடிவில்: உயிரிழந்த 11 வயது கல்கரி சிறுவனுக்கு மக்கள் அஞ்சலி

July 31, 2026

இந்த மாதத் தொடக்கத்தில் காணாமல் போயிருந்து, பின்னர் உயிரிழந்தமை பொலிஸாரால் உறுதி செய்யப்பட்ட Parker என்ற 11 வயது கல்கரி

default (42)

மே மாதத்தில் கனடிய பொருளாதாரம் 0.3% வளர்ச்சி: 2வது காலாண்டில் வலுவான மீட்சிக்கு வழிவகுப்பு

July 31, 2026

ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட மெதுவான வளர்ச்சிக்குப் பிறகு, கனடாவின் பொருளாதாரம் மே மாதத்தில் 0.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது தொடர்ந்து

6

151 முதுநிலை மருத்துவ இடங்களை இழப்பது வெட்கக்கேடு: தவெக அரசைக் கடுமையாக விமர்சித்த சீமான்!

July 31, 2026

சென்னை: தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்குச் சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்குத் தாரைவார்த்து விட்டு, அதில்

pujith jayasun

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 31, 2026

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த

easter

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 31, 2026

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த

toronto police155

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: பல குடியிருப்புத் தொகுதிகள் சேதம்

July 31, 2026

ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பல குடியிருப்புத் தொகுதிகள் (Apartment units) சேதமடைந்துள்ளதாகவும், இது

VUS4EXNJIFFBLGZA3K2V543T3M

ஸ்கார்பரோவில் விபத்து: இருவர் பலத்த காயம், ஒருவர் கைது

July 31, 2026

ஸ்கார்பரோவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பயங்கர விபத்தின் (Street Racing) திடுக்கிடும் தருணங்கள் டேஷ்கேம் (Dashcam) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்து

photo-collage.png (6)

பலாலி காணி விடுவிப்புப் போராட்டத்தில் சிறீதரன் எம்.பி

July 31, 2026

​பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள்

m

மண்மேடு சரிந்ததில் ஒருவர் படுகாயம்

July 31, 2026

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில்