பாராளுமன்ற ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

2027 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் அனைத்து துறைகளிலும் இயலாமையுள்ள நபர்களின் உள்வாங்குகையை உறுதிப்படுத்துமாறு இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக, இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இயலாமையுள்ள நபர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட தேசிய பங்கேற்பு வரவுசெலவுத் திட்ட ஆலோசனைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட விரிவான பரிந்துரைகள் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தவிசாளர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில், 2026 மே […]

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் […]

புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கானவர் பலி!

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: இவர் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்கு நேற்று முன்தினம் (29) பனை வெட்டுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது கருக்குளவி தாக்கியதில் (கொட்டியதில்) காயமடைந்த இவரை, அவரது மகன் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி […]

முதல் அரையாண்டில் 2.95 டிரில்லியன் வருமானம்

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஜனவரி-ஜூன் அரச நிதி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்த நிலையில், […]

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; சாட்சியம் வெளிவருவது தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் – நீதிமன்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை தலைமை சிறை அதிகாரி நேற்று(30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார். சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியப் பதிவு, பிற்பகல் 3.00 மணி வரை […]

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’ வௌியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பொலிஸ் குழுவொன்று மலேசிய பொலிஸாருடன் இணைந்து அண்மையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, தனுஷ்க கௌஷல்ய என்ற ‘ரத்மலானே சைமா’ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சிபானி இம்ரான் […]

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் […]

இலங்கைக் கரையோரங்களில் 43 கண்டெய்னர் அளவிலான கழிவு பிளாஸ்டிக் துகள்கள் சேகரிப்பு!

இந்தியாவின் கேரளா கடற்பரப்பில் மூழ்கிய ‘MSC Elsa 3’ சரக்குக் கப்பலில் இருந்து வெளியேறி இலங்கைக் கரையோரங்களில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்களில் இதுவரை 43 கண்டெய்னர் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளதாவது, வடக்கில் உள்ள யாழ்ப்பாணத் தீவுகள் முதல் தெற்கில் உள்ள காலி வரையிலான கடற்பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி […]

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக சென்ற கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை (28) ஈரான் நடத்திய தாக்குதலுக்கு “வலுவான பதிலடியாக” இந்தத் தாக்குதல்கள் அமைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக்கில் உள்ள ஈரானிய நிழற்படைகள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் […]

மேனிடோபாவில் காணாமல் போன பூனை: பல வாரங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் ஒன்டாரியோ குடும்பம்

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த பூனை ஒன்று மேனிடோபா (Manitoba) மாகாணத்தில் எதிர்கொண்ட துயரமான சம்பவங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. மேனிடோபாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அங்குள்ள உள்ளூர் சமூகத்தின் உதவியால், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒன்டாரியோ குடும்பம் ஒன்று தங்களுடைய அன்பிற்குரிய பூனையுடன் விரைவில் இணையவுள்ளது. இம்மாத தொடக்கத்தில், ஒன்டாரியோவைச் சேர்ந்த குடும்பமொன்று மேனிடோபாவில் உள்ள விர்டன் (Virden) பகுதியில் முகாமமிட்டுத் தங்கியிருந்தபோது (camping), அவர்களது சுற்றுப்பயணத்தின் இறுதியில் ‘கோல்டி’ (Goldie) […]