கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரபலான பகுதியில், முறையான விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் அறுவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் 21, 23, 34 மற்றும் 41 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.