சென்னை:
தமிழகத்தின் 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று விறுவிறுப்பாகத் தொடங்கிய நிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்குத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டசபை கூடியது. முதலாவதாகப் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் உறுப்பினர்களும் வரிசையாகப் பதவியேற்று வந்தனர். இந்தச் சமயத்தில், தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கீர்த்தனா, தான் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழை (Election Certificate) கொண்டு வர மறந்ததால், அவரால் இன்று உறுப்பினராகப் பதவியேற்க முடியவில்லை.
சட்டமன்ற விதிமுறைகளின்படி, வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே ஒரு உறுப்பினர் பதவிப் பிரமாணம் எடுக்க முடியும் என்பதால், கீர்த்தனா இன்று மற்ற அமைச்சர்களுடன் இணைந்து பதவியேற்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், அந்தச் சான்றிதழைத் தாக்கல் செய்த பிறகு அவர் தனியாகப் பதவியேற்றுக் கொள்வார் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சராக ஏற்கனவே பதவியேற்றிருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதில் ஏற்பட்ட இந்தச் சிறிய மறதி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
#Keerthana #MinisterKeerthana #TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #FortStGeorge #SpeakerKaruppiah #MLAOathTaking #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #ElectionCertificate #PoliticalOops #NewEraTN #StalinVsVijay #ElectionResults2026 #VijayMakkalIyakkam_“`