மனித உரிமைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வேண்டுகோள்

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய தர்க்கித்தல் செயற்திட்டம் ஆகிய 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை இந்தப் பிரகடனத்தை 1994ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. இருப்பினும் அதற்கு முன்பதாக 1979 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசு தனிநபர்களை பலவந்தமாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும், வலிந்து காணாமலாக்குவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் பெருமளவுக்கு இலக்குவைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பாலியல் வன்முறைகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் மறைத்துவருவதன் காரணமாக, அவர்களது குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை இன்னமும் அறியாமல் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் பிரகாரம், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறுவுதை இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே தடுத்தது என நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சித்திரவதைகள் அல்லது ஏனைய மிகமோசமான மீறல்களுக்குச் சமனானவையாகும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டு சித்திரவதைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ‘நபரொருவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாக சந்தேகிக்கப்படும் குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், நாட்டின் சகல பாகங்களிலும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமானது கடந்த 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பாக வடக்கில் தமிழர்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஏனைய மோசமான நடாத்துகைகள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளது.

அதுமாத்திரமன்றி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருந்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவற்றுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. உதாரணமாக தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மே மாதம், இறுதிக்கட்டப் போரின்போது சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டதாகப் பொய்யான கருத்தொன்றை வெளிப்படுத்தியது. இந்த தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது தடுப்புக்காவலின் கீழான சித்திரவதைச் சம்பவங்கள் தீவிரமடைவதற்கு வழிகோலுகிறது.

இக்குற்றங்களைப் பொறுத்தமட்டில் உள்ளக நீதிப்பொறிமுறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரே தெரிவாக இருக்கிறது. இலங்கை ரோம் சாசனத்தில் கையெழுத்திடாத காரணத்தினால், இலங்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகமோசமான, மனிதத்தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், அப்பிரகடனத்தின் வரைமுறைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக அந்தப் பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகிக்குமாறு வலியுறுத்துகிறோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்

is

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

June 30, 2026

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர்

Prakeeth eg

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

June 30, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ்

arrest1

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

June 30, 2026

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா

735222791_1379752507417719_221386906937767859_n

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

June 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்