மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

எதிர்க்கட்சிகள் கூறுவது போல, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்கள் என்பதும், அவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், அவர்கள் குறிப்பிடும் கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது மற்றும் குடும்ப அரசியலை முன்னெடுப்பது போன்ற அனுபவங்கள் எங்களிடம் இல்லை.

ஆயினும், மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும், எந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து, பாராளுமன்றத்திற்குப் புதியவர்களாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் வாழ்க்கையில் பல வருட அனுபவங்களைக் கொண்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல வருட அனுபவம் கொண்டவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நூறு ரூபாயோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் அதிகரித்து வழங்கினார்கள். ஆனால், அனுபவமற்றவர்கள் என்று எங்களைக் கூறும் நாங்கள், 400 ரூபாயை உயர்த்தி வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், கடந்த காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்குக் காணி உறுதிப்பத்திரங்களை அவர்களால் வழங்க முடியவில்லை. ஆனால், நாங்கள் கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்குக் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

எனவே, யாருக்கு உண்மையான அனுபவம் இருக்கிறது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றிப் பரவலாகப் பேசப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கும் கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சம்பளம், 2026 ஆம் ஆண்டு அவர்களின் கைகளுக்குக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை.

ஆகவே, தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டம் கட்டமாகச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். மக்கள் எம்மோடு இருக்கிறார்கள், நாங்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும், நாங்கள் மக்களுக்கான சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். ‘மக்கள் என்றும் எங்கள் பக்கமே’ என தெரிவித்தார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை