பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, ‘டித்வா’ சூறாவளிக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வினய் தாக்கூர் தலைமையிலான Bhaskaracharya Institute of Space Applications and Geoinformatics (BISAG) பிரதிநிதிகள் குழு மார்ச் 9 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.

அவர்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துடன் இணைந்து, ‘PM Gati Shakti’ திறந்த மூல கட்டமைப்பின் அடிப்படையில் இயங்கும் ஒரு புவியியல் (Geospatial) தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளம் பேரிடர் தாக்க மதிப்பீடு செய்வதோடு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகவும் செயல்படும்.

மேலும், இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான Centre for Development of Telematics (C-DoT) பிரதிநிதிகள் குழு மார்ச் 16 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, மொபைல் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப எச்சரிக்கை (Early Warning) முறைமைக்கான Proof of Concept-ஐ வெற்றிகரமாக காட்சிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, Geological Survey of India சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நிலச்சரிவு எச்சரிக்கை முறைமைகள் மற்றும் புவியியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர். அவர்கள் தேசிய கட்டிட ஆராய்சி நிலைய அதிகாரிகளுடனும் சந்தித்து சிறந்த நடைமுறைகள் குறித்து பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்புகளின் நிறைவாக, பேரிடர் தாக்க மதிப்பீட்டு தளமும், மொபைல் அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறைமையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எரங்க வீரரத்ன, ஹன்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளும், எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேலும் மேம்படுத்தி, திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகள் பகிர்வு ஆகியவற்றின் மூலம் பேரிடர் முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க