பிராம்ப்டனில் வாகனக் கடத்தல்: இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிபந்தனைப் பிணையில் விடுதலை

கனடா, பிராம்ப்டன் (Brampton) நகரின் குவீன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் கோர்வே டிரைவ் (Goreway Drive) பகுதிக்கு அருகே இடம்பெற்ற வன்முறை வாகனக் கடத்தல் (Carjacking) சம்பவம் தொடர்பாக இரண்டு ஆண்கள் மீது பீல் பிராந்திய காவல்துறையினர் (Peel Regional Police) குற்றம் சுமத்தியுள்ளனர்.

காவல்துறையின் தகவல்படி, கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 2:10 மணியளவில் தம்பதியினர் (ஒரு ஆணும் பெண்ணும்) தங்கள் வாகனத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்த இரு சந்தேகநபர்கள் அவர்களை அணுகியுள்ளனர். இதன்போது அந்த ஆண் பலவகைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தம்பதியினரின் வாகனத்தைப் பறித்துக்கொண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த ஜூன் 18 ஆம் தேதி வோன் (Vaughan) பகுதியில் வைத்து இரண்டாவது சந்தேகநபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வோன் பகுதியைச் சேர்ந்த எவன் நர்ஸ் (Evan Nurse – 23) மற்றும் பிராம்ப்டனைச் சேர்ந்த ஷெமார் சல்லபி (Shemar Sallaby – 23) ஆகிய இருவர் மீதும் பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

  • கொள்ளை (Robbery)

  • குற்ற எண்ணத்துடன் முகத்தை மறைத்தல் (Disguise With Intent)

  • அமைதிப் காவற்துறை அதிகாரியிடமிருந்து தப்பியோடுதல் (Flight From a Peace Officer)

  • மோட்டார் வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குதல் (Dangerous Operation of a Motor Vehicle)

  • குற்றச்செயல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களைத் தன்வசம் வைத்திருத்தல் – இரண்டு வழக்குகள் (Possession of Property Obtained by Crime)

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவ்விருவரும் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், பீல் பிராந்திய காவல்துறையின் மத்திய கொள்ளை தடுப்புப் பிரிவை (Central Robbery Bureau) 905-453-2121 (ext. 3410) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

குறிப்பு: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள்.

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்

is

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

June 30, 2026

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர்

Prakeeth eg

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

June 30, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ்

arrest1

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

June 30, 2026

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா

735222791_1379752507417719_221386906937767859_n

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

June 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்