பாரிய மனித உரிமை மீறல்கள்: மட்டக்களப்பில் வலுக்கும் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்றைய தினமும் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 04 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதவானால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து இன்று குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் என முதற்கட்ட விசாரணைகளில் அறிய வந்த நிலையில் குறித்த பெண்ணின் குடுபத்தார், உறவினர்கள், பிரதேச பொது மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நாற்பது வட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருந்த வேளையிலும் பொலிஸாரால் இது தொடர்பில் முறையான துரித விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும் தெரிவித்ததுடன், குறித்த சம்பவத்திற்குப் பாரிய கண்டணத்தையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

மட்டக்களப்பு, காந்திப் பூங்காவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் பின்னர் மட்டக்களப்பு கச்சேரி வரை அமைதியான முறையில் பேரணியாக முன்னெடுக்கப்பட்டபோது பொலிஸாரினால் கச்சேரிக்கு செல்ல முடியாதவாறு பஸ்களை இடையில் நிறுத்தியும், கச்சேரி பிரதான வாயிலை மூடியும் தடுத்திருந்தனர். இந்த நிலையில் கச்சேரிக்கு முன்னால் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்து போராட்டக் காரர்களுடன் கலந்துரையாடி அதில் நால்வருடன் நேரடி கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன்போது அரசே குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை வழங்கு, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், கிணற்றில் வீசிய கயவர்களுக்கு என்னதான் தண்டனை, மனித தன்மையற்ற கொலைகாரர்களைத் தூக்கில் இடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு,கொடூரர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளே ஆஜராகாதே போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள், நாற்பது வட்டை கிராம பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்திற்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna

dea

விசேட அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி: சாரதி கைது

April 15, 2026

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த

d

விபத்திற்கான இழப்பீடு பெற 8 மாதங்கள் வரை காத்திருந்தது குறித்து ஒன்டாரியோ வாகன சாரதி அதிருப்தி

April 15, 2026

ஒரு கடுமையான விபத்திற்குப் பிறகு, தனது கார் காப்பீட்டு (Insurance) நிறுவனத்தின் சிக்கலான நடைமுறைகளால் எட்டு மாதங்களாக வாகனம் இல்லாமல்

dd

வளைகுடா கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தல்?

April 15, 2026

ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் மிக உயர்ந்த செயல்பாட்டுத் தலைமையகமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி

ha

நோவா ஸ்கோடியா ஹாக்கி ‘ஹேஸிங்’ விபரீதம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

April 15, 2026

நோவா ஸ்கோடியாவில் (Nova Scotia) ஹாக்கி விளையாட்டில் நடந்த “ஹேஸிங்” (புதியவர்களைத் துன்புறுத்தும் கலாச்சாரம்) தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில்

Miss

மிசிசாகாவில் வாகனம் மோதி ஒருவர் பலி: காவல்துறை தீவிர விசாரணை

April 15, 2026

மிசிசாகாவில் (Mississauga) புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்துப் புலனாய்வு செய்து வருவதாகக் காவல்துறை

acc

விபத்தில் இருவர் படுகாயம்

April 15, 2026

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில், 13 ஆம் திகதியன்று பிற்பகல் தனியார் பேருந்தும் முச்சக்கர

a

அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

April 15, 2026

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி

v

அமெரிக்காவுடன் தொடர்ந்து செய்திகளைப் பரிமாறி வருகிறோம் – ஈரான் வெளியுறவு அமைச்சகம்

April 15, 2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்ந்து தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக