சென்னை:
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பதவி ஆசைக்காகக் கட்சியை அடகு வைக்கத் துடிப்பவர்களை அவர் சாடியுள்ளார்.
அவரது அறிக்கையில், “இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்று, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று வெற்றி பெற்றவர்கள், இன்று பதவி ஆசை முற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முன்மொழிந்ததாக இவர்கள் கூறும் கதையே ஒரு முரண்பாடு. அமைச்சர் பதவிக்காக திமுக-விடம் இவர்கள் தான் பேரம் பேசினார்களோ என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியின் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, ‘பதவி எனும் தோளில் போடும் துண்டுக்கு ஆசைப்பட்டு, கழகம் எனும் இடுப்பில் கட்டும் வேட்டியைக் கழற்றிவிட்டு நிற்காதீர்கள்’ என அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ள அவர், “எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், குதிரை பேரம் செய்வதும் தான் நீங்கள் சொல்லும் மாற்று அரசியலா? மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அரசியல் செய்கிறீர்கள். அதிமுக-வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மற்றும் கொறடா குறித்த கடிதத்தைச் சபாநாயகரிடம் வழங்கிய பிறகும், தலைமையைக் கொச்சையாகப் பேசுபவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் செல்வது எந்த விதத்தில் நியாயம்? இது நான்காம் தர அரசியல்” எனச் சாடியுள்ளார். இந்த அறிக்கை தவெக மற்றும் அதிமுக-வின் அதிருப்தி குழுவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
#KPMunusami #EPS #ADMK #VijayAsCM #TVK_Politics #BreakingNews #May14 #TamilNaduPolitics #AiadmkCrisis #PoliticalWar #CVShanmugam #SPVelumani #StalinVsVijay #DravidianPolitics #NewGovernmentTN #AssemblyUpdates #PolicyFirst #FortStGeorge #TamilNews #VijayMakkalIyakkam_“`