நீதித்துறை உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது அரசியலமைப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும் என புதன்கிழமை (29) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை (27) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில், இதுபற்றி ஆராயும் நோக்கில் விசேட சந்தர்ப்பங்களின்போது மாத்திரம் கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபை நேற்று புதன்கிழமை (29) மு.ப 11.00 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் கூடியது.

நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்கவேண்டும் என இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அத்தீர்மான வரைவில் உள்ளடங்கியுள்ள ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்துவமானது அரசியலமைப்பின் அடிப்படை தூணாகும். அத்தோடு சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.

தற்போது பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக சகல நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை அந்த நீதிபதிகள் பதவியில் இருக்கும்போதே அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது. இவ்வாறானதொரு திருத்தத்துக்கான தேவைப்பாடோ அல்லது கட்டமைப்பு ரீதியான நியாயப்படுத்தல்களோ மக்களிடத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.

அதேபோன்று இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம், கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சினால் சகல பங்குதாரர்களுடனும் நடாத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்: வணிக, ஒப்பந்த மற்றும் முதலீட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தல்’ எனும் திட்டத்தின் ஊடாக நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும், அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் என்ற விடயம் ஒரு முக்கிய திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.

நீதித்துறை முகங்கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினைகளான நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணையில் தாமதம், போதிய வளங்கள் இன்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை, பரந்துபட்ட கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் என்பவற்றுக்கே விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். அத்தோடு தற்போது சேவையில் இருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, தற்போது நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் அரசியலமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்படவேண்டும்.

மேலும் கடந்தகால அரசியலமைப்பு அனுபவங்களைப் பொறுத்தமட்டில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை திருத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், அவை பரந்துபட்ட கலந்தாய்வு செயன்முறையின் பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்மூலும் தற்போது பதவியிலிருக்கும் குறிப்பிட்ட சில நீதிபதிகளை இலக்குவைத்தே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற எண்ணம் உருவாகாது.

நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில் மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும் தங்கியுள்ளது.

ac

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

July 30, 2026

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள்

z_p00-Namal-Rajapaksa

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம் – நாமல் ராஜபக்‌ஷ

July 30, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டமை தவறு. கடந்த கால தவறுகள் ஊடாக

ff

37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி,

B3OFFCNFTZJGJNSYZ7YOVN3PCU

துப்பாக்கியுடன் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபருக்குச் சிறைத்தண்டனை

July 30, 2026

தடைசெய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் கனடாவிற்குள் இரகசியமாக நுழைந்ததை ஒப்புக்கொண்ட நபருக்கு இரண்டு மற்றும் அரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக

EUUUVNQ56XLK2RW557P5JOJTXE

பெல்ஜியத்தில் கைதான கனடிய நேட்டோ (NATO) பெண் பயிற்சிப் பணியாளர்- சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகம்

July 30, 2026

பிரஸ்ஸல்ஸ் — உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனடிய நேட்டோ பெண் பயிற்சிப் பணியாளர் சீனாவுக்காகப் பணியாற்றினார்

9_vck-thirumavalavan-demands-all-party-meeting-on-cauvery-issue-30-07-2026

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

July 30, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்

8

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது: சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்!

July 30, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் அமையவிருந்த பிரம்மாண்டமான வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை

6

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பிஜேபியும் கூட்டு சதி செய்கின்றனர் – அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

July 30, 2026

மாமல்லபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப்

5

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு: எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள்!

July 30, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு

Pierre-OConnor

2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது நடவடிக்கை: மேலும் பல சந்தேக நபர்களைத் தேடும் பணி வீச்சு

July 30, 2026

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன்

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency