நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் நுகர்வு அதிகரிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் இயன்றவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால், நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

“வறட்சியான காலநிலையுடன் நுகர்வோரின் நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே நீரை வழங்க முடியும். அம்பத்தலையில் நாளொன்றுக்கு 560,000 கனமீற்றர் நீரையும், லேபுகமையில் 150,000 கனமீற்றர் நீரையும் மட்டுமே எம்மால் உற்பத்தி செய்ய முடியும். அதற்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் எமக்கு இல்லை. தற்போது நாடு முழுவதும் அதிகபட்ச கொள்ளளவில் நீரை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறோம். இந்த வறட்சி நீடித்தால், அதிகரித்து வரும் தேவையுடன் நீர் வழங்கலில் சிரமங்கள் ஏற்படலாம்.”

“நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துங்கள். பாவனையை நிறுத்தச் சொல்லவில்லை, ஆனால் வீடுகளில் பயன்படுத்தும்போது வீணாவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், சில பிரதேசங்களில் உள்ள உயர்ந்த இடங்களுக்கும், நீர் குழாய்களின் இறுதிப் பகுதிகளுக்கும் நீர் அழுத்தம் குறையக்கூடும். குறைவழுத்த நிலையில் நீர் வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வறட்சி அதிகரித்தால் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.”

இதேவேளை, ஆறுகளின் முகத்துவாரங்கள் ஊடாக உப்பு நீர் கலப்பது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மணல் அகழ்வு போன்ற மனிதச் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.

“ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடங்களில் உப்பு நீர் கலப்பது இப்போது ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மணல் அகழ்வு மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க நாம் உப்பு நீர் தடுப்புகளை அமைத்து வருகிறோம். தற்போது களனி ஆற்றை மையப்படுத்தி உப்பு நீர் தடுப்பு ஒன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க