தொல். திருமாவளவன்-தொல். திருமாவளவன்சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களுடன் தொல். திருமாவளவன் யினரின் சந்திப்பு
இன்று (03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல். திருமாவளவன் அவர்களை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இன்றைய தினம் காலை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற இச்சந்திப்பில்,
* நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்;
* தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கேசன்;
* ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா;
* தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்;
* தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்;
* உத்தியோகபூர்வப் பேச்சாளர் க. சுபாஸ்; மற்றும்
* கொள்கை பரப்புச் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி ந. காண்டீபன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை உள்வாங்கும் வகையிலான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும், ஏக்யராஜ்ய அரசியலமைப்பை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை அரசின் மீது உரிய அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைச் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
அதேவேளை, தமிழர்களின் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படை அரசியல் அங்கீகாரங்களை அடிப்படையாகக் கொண்ட, சமஷ்டி அடிப்படையிலான நிலையான அரசியல் தீர்வே தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வாகும் என்பதையும் எடுத்துரைத்தோம்.
மேலும், நீண்டகாலமாக இலங்கைத் தமிழர் மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் நிலவி வரும் கடல்சார் மீன்பிடிப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதோடு, அதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான அரசியல் ஆதரவும் கோரப்பட்டது.
இதேவேளை, தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு மனிதாபிமானமும் நிரந்தரத்தன்மையும் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு பயனுள்ளதொரு அரசியல் கலந்துரையாடலாக அமைந்ததுடன், தமிழர் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்
735393744_122205327890574891_1122860786103625680_n

தொல். திருமாவளவன்-தொல். திருமாவளவன்சந்திப்பு

July 3, 2026

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களுடன் தொல். திருமாவளவன் யினரின் சந்திப்பு இன்று

8

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் – அமைச்சர் கீர்த்தனா உறுதி

July 3, 2026

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கோவையின் தொழில் வளர்ச்சிக்கான

7

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகல்

July 3, 2026

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்

peel poli

‘பாரிய’ சில்லறை விற்பனைத் திருட்டு விசாரணை குறித்த விபரங்களை வெளியிடவுள்ள பீல் பொலிஸார்

July 3, 2026

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) வெள்ளிக்கிழமை காலை ஸ்கொயர் ஒன் மால் (Square One Mall) வணிக

6_dmk-mla-anitha-radhakrishnan-arrested-political-reactions-03-07-2026

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது; மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்

July 3, 2026

ஆத்தூர்: முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க.

5

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டமிட்ட சதி நடைபெற்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள்

easter bomb

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

July 3, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்குகளில் இருந்து ஆரம்பத்திலேயே தங்களை விடுவிக்குமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப்

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று

court-judge-hammer-gavel-696x398

ரகித, சரித, அருண மூவருக்கும் விளக்கமறியல்!

July 3, 2026

ஹரக் கட்டா தரப்பிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதியமைச்சர்

sumanth

வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

July 3, 2026

வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15

737494258_122205306176574891_7579757557796874545_n

தமிழ்தேசிய பேரவை தமிழக முதல்வர் சந்திப்பு

July 3, 2026

தமிழ்தேசிய பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

Parliame

07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

July 3, 2026

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி