07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.

சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டன.

பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள புதன்கிழமை தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை (188ஆம் அத்தியாயம்) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2482/03 மற்றும் 2482/04 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணிவரை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, (235ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பவற்றுக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் வெளிநாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை பற்றிய விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணம் தூய்தாக்கதல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒழுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் என்பவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

sumanth

வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

July 3, 2026

வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15

737494258_122205306176574891_7579757557796874545_n

தமிழ்தேசிய பேரவை தமிழக முதல்வர் சந்திப்பு

July 3, 2026

தமிழ்தேசிய பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

Parliame

07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

July 3, 2026

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி

Dengue

57000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

July 3, 2026

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Al

கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

July 3, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின்

jud

ஒரு குற்றவாளிக்கு இரு முறை மரண தண்டனை?

July 3, 2026

பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால், இலந்தாரி தேவகே பிரசன்னா லலித் என்பவர், இருமுறை கொலைக் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

4

கவர்னர் அர்லேகர் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் – வைகோ

July 3, 2026

சென்னை: மதுரை மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில், ஆளுநர் அர்லேகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர்

3

திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா? – அப்பாவு கேள்வி

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தி.மு.க. மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்

Chennai: V Senthil Balaji after after taking oath as Minister, at Raj Bhavan in Chennai, Saturday, Sept. 29, 2024. (PTI Photo/R Senthilkumar)(PTI09_29_2024_000150B)

ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம்

July 3, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்

1

“அப்போ புரியல இப்போ தான் புரியுது” – திமுகவை கடுமையாக சாடிய பெ.சண்முகம்

July 3, 2026

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தி.மு.க. மேற்கொள்ளும் குதிரை பேரம் குறித்துப் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

737249636_28404573075798233_8420546817484188575_n

பளைப் பிரதேச மக்களின் காணிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான உரிமையாளர்களுடனான சந்திப்பு

July 3, 2026

பளைப் பிரதேசத்தில் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுடைய தனியார் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக,

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதிவசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

July 3, 2026

முன்னாள் கடற்படைத் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது