தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) நேற்று முற்பகல் (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 2026–2030 என்பது, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைதல் ஆகிய நோக்கங்களுடன், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டுதலுக்கு இணங்க வகுக்கப்பட்ட ஒரு முக்கிய தேசியத் திட்டமாகும்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைமையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) திட்டம் வழங்கிய தொழில்நுட்ப உதவியுடனும் இ

ந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், முக்கிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாய்வு செயல்முறையின் விளைவாகும்.

இலங்கையின் ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்குமான உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக இத்திட்டத்தை (2026-2030) அங்கீகரிப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, 2026 மே 4 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டமானது அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை வல்லுநர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களின் பொதுவான இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்தவும், 2030-ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடையவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை வழங்கும் போட்டித்தன்மைமிக்க விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் முதன்மையான தொலைநோக்காகும். இந்த மூலோபாயத் திட்டம், ‘கிடைமட்டத் துறைகள்’ (Horizontals) மற்றும் ‘முன்னுரிமைத் துறைகள்’ (Verticals) ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டதுடன், இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கும், பன்முகப்படுத்துவதற்கும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் தேவையான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

அனைத்து முன்னுரிமைத் துறைகளின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் ஆதரவளிப்பதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்கும் கிடைமட்டத் துறைகளுக்குள் (Horizontals),வர்த்தகச் சங்கிலி (Logistics) மற்றும் ஒருங்கிணைந்த மைய செயல்பாடுகள், வர்த்தக வசதிகளை வழங்குதல், வர்த்தக நிதி மற்றும் வணிக மற்றும் முதலீட்டுச் சூழல்களின் சீர்திருத்தங்கள், வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் சந்தை உறவுகள், தர முகாமைத்துவம், தரநிலைகள், சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவை அடங்குகின்றன.

ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியை அதிகரித்தல், உலகளாவிய சந்தையில் இலங்கையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றிற்காக மோட்டார் வாகன உதிரிபாகங்கள், கனிம அடிப்படையிலான தொழிற்துறைகள், இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள், கடல்சார் கைத்தொழில்கள் (படகு மற்றும் கப்பல் தயாரித்தல் உட்பட), மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், மின் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஆகிய எட்டு (08) முன்னுரிமை ஏற்றுமதித் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த தேசியத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் 2026 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட செயலமர்வுகள் மூலம் இதற்கான பரந்த பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வலுவான நிர்வாக மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது, இலங்கை பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாக எதிர்காலத்தில் செயல்படும்.

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை

725611159_1536223961236185_8994205704252386807_n

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

June 19, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற

teldeniya-hospital

தெல்தெனியவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்: மேலதிக விபரங்களை வெளியிட்டது காவல்துறை

June 19, 2026

தெல்தெனிய போதனா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை மேலதிக விபரங்களை

Kalpitiya-clash

கற்பிட்டி பகுதியில் காவல்துறை – விமானப்படை இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் விமானப்படை தளபதி

June 19, 2026

கடந்த 2026 ஜூன் 17 அன்று கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் (Kalpitiya firing range) குண்டு செயலிழக்கச்

727288129_1634809484246428_3483563959969194747_n

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ள நீதியமைச்சர் – உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்” சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்று செம்மணியில் மாபெரும் போராட்டம்

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை

June 19, 2026

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

gaje

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

June 19, 2026

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற

arrestt

கடத்தல் திட்டத்துடன் தொடர்புடைய மார்க்கம் மிரட்டிப் பணம் பறித்தல் விவகாரம்: மூவர் கைது

June 19, 2026

மார்க்கம் (Markham) பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் மீது யோர்க்

726527369_981914391375336_6986041568040849432_n

எட்மண்டன் காவல்துறை $50,000 பெறுமதியான திருடப்பட்ட பொருட்களை மீட்டது: ‘ரீ-வின்னிங்’ விசாரணையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

June 19, 2026

இணையத்தில் விற்பனைக்காக ஏமாற்றுத்தனமாகப் பட்டியலிடப்பட்டிருந்த இழுவை வாகனம் (Trailer) குறித்த விசாரணையைத் தொடர்ந்து, எட்மண்டன் காவல்துறை சுமார் $50,000 மதிப்பிலான