ஹெரோயின் சந்தேகநபருடன் தொடர்புடைய சொத்துக்களை யாழ்ப்பாண பொலிஸார் பறிமுதல் செய்தனர்

கடந்த 2026 பிப்ரவரி 26 அன்று முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அரியாலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான சொத்துக்களை யாழ்ப்பாண பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகநபரால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் இச்சொத்துக்கள், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுள் 695,950 ரூபாய் பெறுமதியான ஒரு […]

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (Tourism Promotion Bureau) நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசந்த அமரசேன இன்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ​​மூன்றாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி […]

மேல்முறையீட்டு நீதிமன்றம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் மனு மீதான விசாரணையை இடைநிறுத்தியது

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பாகக் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர தாக்கல் செய்திருந்த ரிட் மனுவின் மேலதிக நடவடிக்கைகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) இடைநிறுத்தியுள்ளது. இந்தக் கட்டத்தில் வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்ற அமர்வுக்கு அறிவித்தார். நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் […]

நாளை பரிசீலனைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்காக நாளை (18) அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, இந்த மனுவின் காரணிகளை உறுதிப்படுத்துவதற்காக நாளை அழைக்க உத்தரவிடுவதாக தலைமை […]

பிணையில் வெளியேறினார் யோஷித

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனான யோஷித ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய சந்தேக நபர் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர நிலைகளில் விடுவித்த நிதிமன்றம் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்துள்ளது.

“வெள்ளை அறிக்கை வெறும் நாடகம்!” – தவெக அரசை வெளுத்த ஜெயக்குமார்!

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தவெக அரசு தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கையைத் திரையாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், ஜூன் 18-ஆம் தேதி சட்டமன்றக் கூட்டம் கூடவுள்ள நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசின் செயல்பாடுகள் […]

“விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு!” – முதலமைச்சரை வெளுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 75,000 வரை முழு தள்ளுபடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி என்ற தவெக அரசின் அறிவிப்பிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “பயிர் கடன் தள்ளுபடியில் அனுபவமில்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது. தேர்தலின் போது குறு, […]

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வரட்னம், அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் அன்புக் கணவரும்,சஹானா, சஞ்சனா, அக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கணேசலிங்கம், சண்முகலிங்கம், சாந்தினி, சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தி, ஆனந்தி, ஜெயகருணாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் […]

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்ட மாணவர் மீதான சித்திரவதை வழக்கு: முன்னாள் ஓ.ஐ.சி உட்பட 4 பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேலியகொட பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சட்ட மாணவர் ஒருவரைப் பயங்கரமாகத் தாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பேலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் ஓ.ஐ.சி லின்டன் […]

காணாமல் போன மீனவரின் பிள்ளைகளின் கல்விக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது.

காணாமல் போன மீனவரின் பிள்ளைகளின் கல்விக்கு முழுப் பொறுப்பு: அண்மையில் கடலுக்குச் சென்றபோது காணாமல் போன கோரியடி மீனவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் எமது கட்சி அக்கறையாகவுள்ளது. அதற்கமைய, இரண்டு பிள்ளைகளினது கல்விகற்கும் காலம் முழுவதுக்குமான கல்விச்செலவைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது. ​ மீனவர் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூபா 5 லட்சம் நிதியுதவி: கோரியடி வாழ் மீனவத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வட்டியற்ற இலகு தவணைகளில் மீளச் செலுத்தக்கூடிய ரூபா 500,000/= (ஐந்து […]