திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கிய இகசிய வதை  முகாம் மூடப்பட்டது

 திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள “கன் சைட்” (Gun Site) என்று அழைக்கப்படும் நிலத்தடி  இரகசிய வதை முகாமை மூடுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இடத்தில் சுமார் 60 நபர்கள் ரகசியமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கப்பம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், அத்துடன் மேலும் பல கடுமையான குற்றச் செயல்கள் இங்கு அரங்கேறியுள்ளதாகவும் விரிவான விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ பரிசோதனையை மேற்கொள்வதற்காகத் திருகோணமலை […]

அச்ச உணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்கள்’: குறுஞ்செய்தி செயலிகள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கு இளைஞர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுவதாக டொராண்டோ காவல்துறை தகவல்

யூத வழிபாட்டுத் தலங்கள் (Synagogues), யூதப் பள்ளிகள் மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகம் (U.S. Consulate) உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக, “தீய சக்திகளால்” இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து ஏவப்படும் “வாடகைக்குத் துப்பாக்கி ஏந்துபவர்கள்” (gun-for-hire) திட்டத்தின் கீழ் கிரேட்டர் டொராண்டோ பகுதி (GTA) முழுவதும் பல டஜன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை, ஜிடிஏ (GTA) பகுதி […]

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் காரணமின்றி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம்: சந்தேக நபரைக் தேடும் காவல்துறை

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் காரணமின்றி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருவதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர். விசாரணையாளர்களின் கூற்றுப்படி, ஜூன் 12 அன்று மாலை 5 மணியளவில் டன்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) மற்றும் பிராட்வியூ அவென்யூ (Broadview Avenue) பகுதியில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், அவர் […]

விபத்தில் அளவெட்டி இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக […]

சம்மாந்துறையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தகாணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த காணியில் மண் அகழ்வு பக்கோ இயந்திரம் […]

கல்வி அமைச்சிடம் அவசர கோரிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து […]

பண மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

லங்கைக் குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, நபரொருவரிடமிருந்து 4,990,000 ரூபாய் பண மோசடி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று பிற்பகல் இந்த குற்றச்சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜையான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது […]

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் தொடர்பில் முறைப்பாடு?

யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வைத்திய நிபுணரால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (16.06.2026) காலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் மகளான இளம்பெண் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்தபோது, பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அவரை இடைமறித்து […]

அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது – சஜித் சாடல்

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நமது நாட்டின் 15 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். இலவசக் […]

எட்மன்டனில் முன்னாள் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிறுவர் ஆபாசக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளார்

எட்மன்டன் (Edmonton) நகரின் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர், கனடாவுக்குத் திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டு, சிறுவர் ஆபாசப் படங்களுடன் தொடர்புடைய பல குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளார். எட்மன்டனிலுள்ள ‘செயிண்ட் ஆஸ்கார் ரொமேரோ’ கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் (St. Oscar Romero Catholic High School) முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய ஜிம்மி புவெனா (Jimmy Buena), கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று எட்மன்டன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக் […]