“விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு!” – முதலமைச்சரை வெளுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 75,000 வரை முழு தள்ளுபடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி என்ற தவெக அரசின் அறிவிப்பிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “பயிர் கடன் தள்ளுபடியில் அனுபவமில்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது. தேர்தலின் போது குறு, […]
திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வரட்னம், அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் அன்புக் கணவரும்,சஹானா, சஞ்சனா, அக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கணேசலிங்கம், சண்முகலிங்கம், சாந்தினி, சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தி, ஆனந்தி, ஜெயகருணாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் […]
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்ட மாணவர் மீதான சித்திரவதை வழக்கு: முன்னாள் ஓ.ஐ.சி உட்பட 4 பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேலியகொட பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சட்ட மாணவர் ஒருவரைப் பயங்கரமாகத் தாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பேலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் ஓ.ஐ.சி லின்டன் […]
காணாமல் போன மீனவரின் பிள்ளைகளின் கல்விக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது.

காணாமல் போன மீனவரின் பிள்ளைகளின் கல்விக்கு முழுப் பொறுப்பு: அண்மையில் கடலுக்குச் சென்றபோது காணாமல் போன கோரியடி மீனவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் எமது கட்சி அக்கறையாகவுள்ளது. அதற்கமைய, இரண்டு பிள்ளைகளினது கல்விகற்கும் காலம் முழுவதுக்குமான கல்விச்செலவைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது. மீனவர் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூபா 5 லட்சம் நிதியுதவி: கோரியடி வாழ் மீனவத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வட்டியற்ற இலகு தவணைகளில் மீளச் செலுத்தக்கூடிய ரூபா 500,000/= (ஐந்து […]
“இது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!” – தவெக அரசை வெளுத்த தங்கம் தென்னரசு!

சென்னை: தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை \”வெற்று அறிக்கை\” என்று வர்ணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் கடன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற அமைச்சர் மரிய வில்சனின் குற்றச்சாட்டைத் தங்கம் தென்னரசு முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் விரிவான விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், \”வாணவேடிக்கை வாக்குறுதிகளை […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை – அருட்தந்தை சிறில் காமினி விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயருக்கு முன்கூட்டியே எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், ஏப்ரல் 21ஆம் திகதி காலையில் கொழும்பு பேராயர் இல்லத்தில் (Bishops House) நடைபெற்ற தனியார் திருப்பலி வழிபாட்டின் பின்னரே இந்த பேரழிவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று (17) தெரிவித்துள்ளார். “தாக்குதலுக்கு முன்னர் கர்தினாலுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதால், அவரது பாதுகாப்புப் பிரிவினரால் அவருக்கு இந்தத் தகவல் […]
சுரேஷ் சலேநிர்வாணமாக்கப்பட்டு, அத்துமீறிய உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ஒப்புக் கொண்டது சி.ஐ.டி-மனைவி மனோரி

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு அத்துமீறிய உடல் சோதனைக்கு (Deep Invasive Search) உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே குற்றஞ்சாட்டியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோரி சலே, தனது கணவரை சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, பிறர் முன்னிலையில் அவரது ஆடைகளைக் […]
தொல்பொருள் ஒன்றை விற்க முயன்ற ஐவர் கைது
பண்டைய தொல்பொருள் மதிப்புடையதாகக் கருதப்படும் பொருளொன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ஐந்து சந்தேக நபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புல்மோட்டை பொலிஸ் பிரிவின் தென்னமரவாடி பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தங்கள் வசமிருந்த தொல்பொருள் மதிப்புடைய பொருளை 20 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளனர். அதன்போதே பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 29 முதல் […]
வவுனியா பொது வைத்தியசாலையில் இறப்போரின் உடல்களை வைத்து பண மோசடி?

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகரின் மலர்சாலைக்கு உறவினர்களுக்கு தெரியாமல் வைத்தியசாலையில் இருந்து பிணங்கள் கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணிப்பவர்களின் உடல்களை சுத்தம் செய்து பெட்டியில் இடுவதற்காக உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக வைத்தியசாலையில் உள்ள சிற்றூழியர் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிலர் தாமே சடலத்தை வைத்தியசாலையில் இருந்து விடுவித்து வைத்தியசாலை முன்பாக உள்ள அரசியல்வாதி ஒருவரின் மலர்சாலையில் உடலை ஒப்படைத்து விட்டு […]
Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]