சுரேஷ் சலேநிர்வாணமாக்கப்பட்டு, அத்துமீறிய உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ஒப்புக் கொண்டது சி.ஐ.டி-மனைவி மனோரி

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு அத்துமீறிய உடல் சோதனைக்கு (Deep Invasive Search) உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோரி சலே, தனது கணவரை சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, பிறர் முன்னிலையில் அவரது ஆடைகளைக் களைந்து, விலங்கிடப்பட்ட நிலையில் மலக்குடல் பரிசோதனை உள்ளிட்ட அத்துமீறிய ஆழமான உடல் சோதனைக்கு உட்படுத்தியதை சி.ஐ.டி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 8ஆம் திகதி இச்சம்பவம் நடந்ததிலிருந்து சி.ஐ.டி இந்த உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தது. எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அமர்வில் கலந்துகொண்ட சி.ஐ.டி அதிகாரிகள், இந்த நடைமுறையை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த தேடுதலுடன் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் இதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

“சுரேஷ் சலே ஆரம்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சட்டவைத்திய அதிகாரி (JMO) மூலம் பரிசோதிக்கப்பட்ட போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவர் ஒரு விசேட ‘தண்டனை அறைக்கு’ மாற்றப்பட்ட பின்னரே, இத்தகைய கடுமையான சோதனைகளும் சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன” என மனோரி சல்லே தெரிவித்தார்.

அவரது தற்போதைய தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து விவரித்த அவர், தனது கணவர் எவ்வித காற்றோட்டமும் இல்லாத 6×4 அடி அளவுடைய மிகச் சிறிய அறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு வகையான உளவியல் சித்திரவதையாக 24 மணி நேரமும் அந்த அறையில் மின்விளக்கு எரியவிடப்பட்டுள்ளதுடன், முதல் 40 நாட்களுக்கு அவர் வெற்று சிமெந்து தரையிலேயே தூங்கக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ் வளாகம் எலிகள் தொல்லை மிகுந்ததாகக் காணப்படும் அதேவேளை, அதே தளத்தில் இருந்த வேறு சில கைதிகள் எலி கடித்ததால் அவசர மருத்துவ ஊசிகளைப் பெற வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மலசலகூடத்திற்கு மிக அருகில் இந்தச் சிறை அறை அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் கடுமையான துர்நாற்றம் காரணமாகத் தனது கணவரின் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி (Migraine) நோய் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய நிலையில் சுரேஷ் சலே உணவு மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள மறுத்து வருவதால், ஊசி மூலம் உட்செலுத்தப்படும் (Intravenous) குறைந்தபட்ச திரவங்கள் மூலமே மருத்துவப் பணியாளர்கள் அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர். அவர் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும், பேசுவதற்குக் கடுமையான சிரமத்தை எதிர்கொள்வதுடன், நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார முடியாமலும், கைகளில் நீண்ட நாட்களாக ஊசிக்குழாய் (Cannula) பொருத்தப்பட்டிருப்பதால் கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி விவரித்தார்.

இவ் மனித உரிமை மீறல்கள் குறித்து விவரித்து, இதில் தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு தான் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து தமக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அல்லது கடிதம் கிடைத்ததற்கான அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றும் மனோரி சல்லே மேலும் தெரிவித்தார்.

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை

725611159_1536223961236185_8994205704252386807_n

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

June 19, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற

teldeniya-hospital

தெல்தெனியவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்: மேலதிக விபரங்களை வெளியிட்டது காவல்துறை

June 19, 2026

தெல்தெனிய போதனா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை மேலதிக விபரங்களை

Kalpitiya-clash

கற்பிட்டி பகுதியில் காவல்துறை – விமானப்படை இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் விமானப்படை தளபதி

June 19, 2026

கடந்த 2026 ஜூன் 17 அன்று கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் (Kalpitiya firing range) குண்டு செயலிழக்கச்

727288129_1634809484246428_3483563959969194747_n

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ள நீதியமைச்சர் – உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்” சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்று செம்மணியில் மாபெரும் போராட்டம்

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை

June 19, 2026

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

gaje

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

June 19, 2026

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற

arrestt

கடத்தல் திட்டத்துடன் தொடர்புடைய மார்க்கம் மிரட்டிப் பணம் பறித்தல் விவகாரம்: மூவர் கைது

June 19, 2026

மார்க்கம் (Markham) பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் மீது யோர்க்

726527369_981914391375336_6986041568040849432_n

எட்மண்டன் காவல்துறை $50,000 பெறுமதியான திருடப்பட்ட பொருட்களை மீட்டது: ‘ரீ-வின்னிங்’ விசாரணையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

June 19, 2026

இணையத்தில் விற்பனைக்காக ஏமாற்றுத்தனமாகப் பட்டியலிடப்பட்டிருந்த இழுவை வாகனம் (Trailer) குறித்த விசாரணையைத் தொடர்ந்து, எட்மண்டன் காவல்துறை சுமார் $50,000 மதிப்பிலான